Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்
    தேசியம்

    முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

    adminBy adminJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது 93 வயதான அந்த நபர் தனது மனைவிக்கு தாலி வாங்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். தங்கள் மகன் குடிகாரனாகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் தாலி செயின், தொங்கட்டான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அவர்களிடம் பணம் இல்லையென்று நினைத்து நான் தங்கத் தாலியைத் தருவதாகக் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்து தங்களிடமிருந்து சில்லறையைத் தந்தனர். அந்த சில்லறை ரூ.1,100-க்கு இருந்தது.

    இதையடுத்து நான் அவரிடமிருந்து வெறும் ரூ.10-ம், அவரது மனைவியிடமிருந்து ரூ.10-ம் ஆக ரூ.20 பெற்றுக் கொண்டு தாலியை அவர்களுக்குக் கொடுத்தேன். பணம் கொடுக்காமல் நகையை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக இருந்தனர்.

    இதையடுத்து அவர்களிடமிருந்து ஆசிர்வாதமாக ரூ.20 வாங்கி, அந்தத் தம்பதியினரிடம் தாலியை (மங்கள சூத்திரா) கொடுத்தேன். அவர்களின் செய்கை என்னை மிகவும் கவர்ந்தது. அதனால்தான் அவர்களுக்கு தங்கத் தாலியை ரூ.20-க்குத் தந்தேன்.

    அவர்கள் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாங்கீர் என்ற கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நிவ்ருட்டி ஷிண்டே, சாந்தாபாய் என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் ஆடி மாத ஏகாதசிக்காக பண்டார்பூரிலுள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தள்ளாத வயதிலும் தனது மனைவிக்காக தாலியை வாங்கிக் கொடுத்த அவரது பாசம் என்னை புல்லரிக்கை வைத்தது. அந்தத் தாலியில் அவர்கள் கொண்டு வந்த செயின், தொங்கட்டானையும் சேர்த்துக் கொண்டனர்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    தேசியம்

    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி
    • ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்
    • 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.