Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: நலத்திட்டங்கள் வழங்கி, மும்மத பிரார்த்தனை
    மாநிலம்

    தமிழக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: நலத்திட்டங்கள் வழங்கி, மும்மத பிரார்த்தனை

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: நலத்திட்டங்கள் வழங்கி, மும்மத பிரார்த்தனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ராகுல்காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மும்மத பிரார்த்தனை செய்தும் நேற்று கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் ஏற்பாட்டில், மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு ராகுல்காந்தி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தார்.

    மேலும், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும், சென்னை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த இலவச செவிபுலன் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், காங்கிரஸ் மாநில விளையாட்டுப் பிரிவு சார்பில் ரத்ததான முகாம் ஆகியவற்றை செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்து, ஏழை, எளியோருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர், வழக்கறிஞர் கீ.சு.குமார் உருவாக்கிய ‘அவர் பெயர் ராகுல்காந்தி’ எனும் ஆவணப்படத்தை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, ‘சமூகநீதிக்கான ஒரே தீர்வு நாடு தழுவிய சாதிவாரி கணக்கெப்பு என ஓங்கி குரல் கொடுக்கும் ராகுல்காந்தி’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், உ.பலராமன், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழக மக்கள் மற்றும் தமிழ் பண்பாடு மீது தொடர்ந்து படை எடுப்பை பாஜக நடத்தி வருகிறது. தமிழக வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றனர். கீழடி ஆய்வறிக்கையை மாற்ற முயற்சித்துள்ளனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் சொன்னது போன்று, திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான, உறுதியான கூட்டணியாக உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 11 ஆண்டுகளாக அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘எனது கருத்தியல் உடன்பிறப்பான ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இது ரத்த பந்தத்தால் அல்ல. சிந்தனை, தொலைநோக்கு நோக்கங்களால் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக நின்று துணிவுடன் வழிநடத்த வேண்டும். ஒளிமயமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் வெற்றி நமதே” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

    இதற்கு ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி, உங்கள் நட்பும், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையும் எனக்கு மிகவும் முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.

    மேலும், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

    September 12, 2025
    மாநிலம்

    சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

    September 12, 2025
    மாநிலம்

    4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை

    September 12, 2025
    மாநிலம்

    கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை: திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்

    September 12, 2025
    மாநிலம்

    மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது – அன்புமணி

    September 12, 2025
    மாநிலம்

    சாதிய படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பிருந்தா காரத் வலியுறுத்தல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமூக மாற்றத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோகன் பாகவத்: 75-வது பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
    • அரசு இல்லத்தை காலி செய்தார் ராஜபக்ச
    • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை
    • ஒரு வொர்க்அவுட்டை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்க முடியுமா? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.