Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இன்று போய் நாளை வா! – மக்களை அலைக்கழிக்கும் காஞ்சிபுரம் ஆதார் மையம்
    மாநிலம்

    இன்று போய் நாளை வா! – மக்களை அலைக்கழிக்கும் காஞ்சிபுரம் ஆதார் மையம்

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இன்று போய் நாளை வா! – மக்களை அலைக்கழிக்கும் காஞ்சிபுரம் ஆதார் மையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது என பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 பேருக்கு மட்டும் டோக்கன் விநியோகித்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்குள்ளேயே ஆதார் மையம் இயங்கி வருகிறது. இந்த ஆதார் மையத்துக்கு காலை 9 மணிக்கே பொதுமக்கள் வந்துவிடுகின்றனர். கைக் குழந்தைகளுடன் வருவோர், முதியோர், கர்ப்பிணிகள் என பலர் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

    பின்னர் 9.45 மணி அளவில் (ஒவ்வொரு நாளும் இந்த நேர அளவு மாறும்) அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. சுமார் 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கும் ஊழியர்கள் மற்றவர்களை வட்டாட்சியர் அலுவலகம் செல்லுங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் பெயரைச் சொல்லி அந்த வங்கிகளுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்புகின்றனர்.

    கைகுழந்தையுடனும், சிறுவர்களுடனும் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் என பலரும் செய்வதறியாமல் விழிக்கின்றனர். இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் பலர் அதிருப்பதியும் அடைகின்றனர். பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்துவிட்டு மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கும், கைரேகை வைப்பதற்கும் வருகின்றனர். ஆனால் ஆதார் மையத்தில் உரிய சேவை அளிக்க முடியாத நிலையில் மாணவர்களும் அலைக்கழிக்கப்படுவதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது குறித்து செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கூறுகையில் 40 பேருக்கு தான் டோக்கன் வழங்குகின்றனர். வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒரு மணி நேரம் கழித்து இங்கு செல், அங்கு செல் என்று அலைக்கழிக்கின்றனர். நான் இரு நாள்களாக அலைந்துவிட்டு தற்போது 3-வது நாளாக இங்கு வந்துள்ளேன்.

    ஊழியர்கள் வரும் நேரம் ஒவ்வொரு நாளும் மாறுபடுகிறது. இதனால் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் கூறும் வேறு இடங்களுக்குச் சென்றாலும் அங்கும் நாளைக்கு வாருங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். இந்த சேவை மையத்துக்கு வரும் மக்களுக்கு உரிய சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷிடம் கேட்டபோது ஆதார் மையத்துக்கு வரும் மக்களுக்கு உரிய சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக’ – சென்னையில் 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி!

    July 19, 2025
    மாநிலம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    July 19, 2025
    மாநிலம்

    பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 19, 2025
    மாநிலம்

    கொடைக்கானல்: சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    July 19, 2025
    மாநிலம்

    ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்; இதில் குழப்பமே இல்லை’ – அண்ணாமலை உறுதி

    July 19, 2025
    மாநிலம்

    ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு
    • ‘வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றுக’ – சென்னையில் 3,000+ பகுதிநேர ஆசிரியர்கள் திரண்டு பேரணி!
    • கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
    • டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?
    • பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.