Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘மனு கொடுத்தால் குப்பைக்குதான் போகுது’ – அமைச்சர் நிகழ்வில் குற்றம்சாட்டிய பெண்
    மாநிலம்

    ‘மனு கொடுத்தால் குப்பைக்குதான் போகுது’ – அமைச்சர் நிகழ்வில் குற்றம்சாட்டிய பெண்

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மனு கொடுத்தால் குப்பைக்குதான் போகுது’ – அமைச்சர் நிகழ்வில் குற்றம்சாட்டிய பெண்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘மனுக்கள் கொடுத்தால் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது’ என பெண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பெண் வசிக்கும் கிராமத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

    இந்த முகாமில் அமைச்சர் கோவி.செழியன், ‘‘மக்களிடம் வலது கையில் மனு வாங்கி, இடது கையில் பரிசீலித்து, மீண்டும் வலது கையில் திட்டத் தை தீட்டி தருவது தான் ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இயங்கிய அரசாங்கத்தை ராக்கெட் வேகத்தில் இயக்குபவர் முதல்வர் ஸ்டாலின்’’ என பேசினார்.

    அப்போது, முகாமில் மனு அளிக்க வந்த கொள்ளைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சமன்ஷா மேரி (67) என்பவர், ‘‘நாங்கள் வசிக்கும் பகுதியில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. தெரு விளக்குகளும் எரிவது இல்லை. இதுகுறித்து புகார் செய்தால் போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மனு கொடுக்க வந்த இடத்தில் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்’’ என அமைச்சர் முன்னிலையில் குற்றம்சாட்டிப் பேசினார்.

    மேலும், இதுவரை 5 முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், அவை குப்பைத் தொட்டிக்கு சென்று விட்டதாகவும், தங்கள் வசிக்கும் பகுதி சுடுபோடு போல இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேற்று கொள்ளைக்காடு கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதுவரை பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் அங்கு வந்த கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், கிராம மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சேரக்கூடாத இடத்தில் அதிமுக சேர்ந்திருக்கிறது: பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த இரா.முத்தரசன்

    July 20, 2025
    மாநிலம்

    மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன்

    July 20, 2025
    மாநிலம்

    அரசின் உத்தரவை எதிர்த்து சிபிஎம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஆக.18-க்கு தள்ளிவைப்பு

    July 20, 2025
    மாநிலம்

    மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்

    July 20, 2025
    மாநிலம்

    கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 20, 2025
    மாநிலம்

    விசிகவின் நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் இடைநீக்கம்: திருமாவளவன்

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹார்வர்ட் ஆய்வு மூளை ஆரோக்கியத்திற்கு 17 அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துகிறது, இது உங்கள் பக்கவாதம் மற்றும் முதுமை அபாயத்தை அமைதியாக அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதமாற்றத்தில் சாங்குர் பாபா கும்பலுக்கு தமிழகத்துடன் தொடர்பு: சென்னை வருகிறது உத்தர பிரதேச மாநில ஏடிஎஸ் படை
    • எம்சிசி – முருகப்பா ஹாக்கி இறுதிப் போட்டியில் இன்று ரயில்வே-கடற்படை மோதல்
    • இந்த எளிய இளஞ்சிவப்பு டிடாக்ஸ் பானம் ஒளிரும் சருமத்திற்கான உங்கள் ஒரு நிறுத்த தீர்வாகும் – இந்தியாவின் நேரங்கள்
    • ஜம்மு – காஷ்மீரில் தீவிர சோதனை: தீவிரவாதிகளுக்கு உதவிய 10 பேர் கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.