Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வில் அரசியல் ஆதாயம் தேடுவது மலிவான செயல்” – முத்தரசன் விமர்சனம்
    மாநிலம்

    “முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வில் அரசியல் ஆதாயம் தேடுவது மலிவான செயல்” – முத்தரசன் விமர்சனம்

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வில் அரசியல் ஆதாயம் தேடுவது மலிவான செயல்” – முத்தரசன் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வை, நம்பிக்கையை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது,” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (ஜூன் 22) மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் முழுவதும் அரசியல் கண்ணோட்டத்துடன் அமைந்து இருக்கிறது. இயல்பான முருக பக்தர்கள் ஆண்டுதோறும் தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில், முருக வழிபாட்டுக்காக, அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆறுபடை வீடுகளுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருவது நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றது.

    கோயில்களில் திரளும் பக்கதர்களுக்கான அடிப்படை வசதிகளை இந்துசமய அறநிலையத் துறையும், அந்தந்த ஆலய நிர்வாகமும் செய்து தருகின்றன. ஆன்மிக நம்பிக்கை கொண்ட பக்தர்கள், நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுக அன்னதானம் வழங்குவது, தண்ணீர் பந்தல் அமைத்து உதவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பழனி மலையை நோக்கிச் செல்லும் சாலைகளில் உள்ளாட்சி அமைப்புகளும், நெடுஞ்சாலைத் துறையும் சாலையோரங்களில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தனி வழித்தடம் அமைத்துள்ளன. சென்ற 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் இந்துசமய அறநிலையத் துறை முன்னின்று, சர்வதேச முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது.

    இந்த நிலையில், இந்து முன்னணி, முருக பக்தர்கள் மாநாடு நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? கடந்த 1981-ம் ஆண்டில் தென் மாவட்டங்களில் தீண்டாமையும், சாதி ஆதிக்கமும் அடக்குமுறை தாக்குதல்கள் தீவிரமாகியபோது, மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் அரசியல் ஆதாயம் தேட ஆர்எஸ்எஸ் ராமகோபாலன் இந்து முன்னணி அமைப்பை உருவாக்கினார்.

    இது ஆரம்ப நாளில் இருந்து மதவெறி அரசியலை முன்னெடுத்து மக்களிடம் வெறுப்பு அரசியலை பரப்புரை செய்து வருவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரத்தை பயன்படுத்தி, வட மாநிலங்களில் அரசியல் ஆதாயம் அடைந்தது போல, தென் மாநிலத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் “முருகனை” பயன்படுத்தி அரசியல் களத்தில் ஆதாயம் தேடும் முயற்சியாகவே மதுரை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டையொட்டி, பாஜகவின் மாநிலத் தலைவர், இந்து முன்னணி தலைவர்கள், அன்றாடம் மாநில அரசின் மீதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது அவர்களது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வை, நம்பிக்கையை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், அரசியல் ஆதாயம் தேடும் குறுக்கு பார்வை கொண்டவர்களின் முருக பக்தர்கள் மாநாட்டை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு பெருமிதம்

    July 20, 2025
    மாநிலம்

    ரூ.1.42 கோடி கடன் மோசடி வழக்கு: வங்கி நிர்வாகிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

    July 20, 2025
    மாநிலம்

    நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

    July 20, 2025
    மாநிலம்

    பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

    July 20, 2025
    மாநிலம்

    பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 20, 2025
    மாநிலம்

    ‘கவனிப்பு’ பிரச்சினையால் களேபரமான திருப்பத்தூர் நகர்மன்றம்! – திமுக சேர்மனுக்கு திருகுவலியை உண்டாக்கும் திமுக கவுன்சிலர்கள்

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை
    • ‘பேட் கேர்ள்’ டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு பெருமிதம்
    • சென்னையில் மேலும் 2 இடங்களில் டெலிவரி ஊழியர் ஓய்வு கூடங்கள்!
    • கோமா: காரணங்கள், வகைகள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை விளக்கப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.