Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களை ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி, 2023 ம் ஆண்டு செப்டம்பர் முதல், இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் இன்று (ஜூன் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் , கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தல், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த ஜூன் 11-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது. அந்த அரசாணையின் நகலும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த பின்னர் தான், குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை கடந்த ஜூன் 11-ம் தேதி வரை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்.

    எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள், ஜூலை 21-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பாமக எம்எல்ஏக்கள் மூவர் இடைநீக்கம் – ராமதாஸ் அதிரடி

    July 20, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    July 20, 2025
    மாநிலம்

    “ஆட்சியில் பங்கு என்பது காங்கிரசுக்கும் ஆசை உண்டு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி

    July 20, 2025
    மாநிலம்

    மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை – பாஜக கண்டனம்

    July 20, 2025
    மாநிலம்

    கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து விரைவில் தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு

    July 20, 2025
    மாநிலம்

    அமித் ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது: செல்வப்பெருந்தகை

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆரோக்கியமான கோடை முற்றத்தில் 5 ஸ்மார்ட் புல்வெளி ஹேக்குகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பாமக எம்எல்ஏக்கள் மூவர் இடைநீக்கம் – ராமதாஸ் அதிரடி
    • கல்லீரலை சுத்தப்படுத்தி நச்சுத்தன்மையுள்ள 5 சூப்பர்ஃபுட்கள்
    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: கிரண் ரிஜிஜு
    • 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.