Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, January 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில் அவலம்
    மாநிலம்

    முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில் அவலம்

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: அமைச்சர் தொகுதியில் அவலம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கும்பகோணம்: தமிழக முதல்வர் காணொலியில் திறந்துவைத்த 3 நாட்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூரில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 16-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவிடைமருதூர் வட்டம் சூரியனார்கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

    இந்தநிலையில், சூரியனார்கோவிலில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலிருந்த பொருட்கள் மற்றும் கோப்புகளை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, புதிய கட்டிடத்தின் ஒரு அறையில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர், இதுகுறித்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சேதமடைந்த மேற்கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகன் கூறியது: கடந்த 14-ம் தேதியே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் இரு 2 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகிவிடும் என்பதால், ஊராட்சி மன்ற ஊழியர்கள், அலுவலக கதவை தாழிட்டுக் கொண்டு, அவசரகதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    கடந்த 16-ம் தேதி இந்த அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்த நிலையில் நேற்று மற்றொரு அறையின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், யாரும் பார்வையிட வரவில்லை.

    உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்யின் தொகுதியில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் 3 அறைகளில் இருந்த மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் 2 முறை பெயர்ந்து விழுந்துள்ளது வேதனைக்குரியது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற கட்டிடத்தை கட்டியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘சூரியனார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரையில் மின் விசிறி பொருத்தும்போது, மேற்கூரை பெயர்ந்து விழுந்து விட்டது. அது உடனடியாக சரி செய்யப்படும்’’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆர்ட்டெமிஸ் II பணி: நாசாவின் புதிய நிலவு ராக்கெட் பிப்ரவரி மாத தொடக்கத்தில் விண்வெளி வீரர் ஏவுதலுக்கு முன்னதாக ஏவுதளத்திற்கு செல்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நூபுர் சனோனின் திருமண லெஹங்கா பஞ்சாபி மற்றும் மலையாளத்தில் காதல் குறிப்புகளைக் கொண்டிருந்தது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த எளிய சமையலறை ஹேக் சில நிமிடங்களில் மேத்தி இலைகளை சுத்தம் செய்கிறது; இனி முடிவில்லா பறிப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுட்டெரிக்கும் வெயிலில் என் சாமான்களை இழுத்தேன், என் கைகளில் ரத்தம் வரும் வரை: நான் நினைவில் கொள்ள விரும்பாத கோவா அனுபவம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 7 செடிகளை உங்கள் வீட்டிலிருந்து அகற்ற வேண்டும், குறிப்பாக உங்களிடம் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் இருந்தால் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.