Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நெல்லையப்பர் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டும் நடவடிக்கை – தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    நெல்லையப்பர் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டும் நடவடிக்கை – தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நெல்லையப்பர் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டும் நடவடிக்கை – தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக 2024-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின்படி கோயில் நிலத்தில், அன்னதான கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது. வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபங்கள் எதுவும் கேட்கப்படவில்லை.

    கோயிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டியுள்ளன. சிதிலமடைந்துள்ள பல கோயில்களை சீரமைக்க வேண்டியுள்ளது. இவற்றின் மீது கவனம் செலுத்தாமல் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாகவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கோயில் நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்க வேண்டும். வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகன்நாத், “கோயில் உபரி நிதியை வணிக வளாகம் கட்ட, சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை உறுதி செய்துள்ளது. நெல்லையப்பர் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டார். அறநிலையத் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதேபோல, சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு என்ற பெயரில், கோயில் நிலத்தில், கோயில் நிதி ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தி திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாக கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இப்பணிகளிலும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

    September 12, 2025
    மாநிலம்

    “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

    September 12, 2025
    மாநிலம்

    சென்னையில் தொடங்கியது மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி!

    September 12, 2025
    மாநிலம்

    தவெக நிர்வாகிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!

    September 12, 2025
    மாநிலம்

    அரிய வகை கனிமங்களின் சுரங்கத் திட்டங்கள்: மத்திய அரசின் நகர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவின் வெப்பமண்டல தப்பிப்புகள்: இந்தியாவில் 6 வெள்ளை மணல் கடற்கரைகள் ஒவ்வொரு கடற்கரை காதலரும் ஆராய வேண்டும்
    • பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!
    • AIIMS மாணவர்களுக்கான புதிய சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: இந்த பயன்பாட்டைப் பதிவிறக்குவது ஏன் முக்கியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    • அமெரிக்காவில் இறப்புக்கான சிறந்த 10 காரணங்கள்: புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் உள்ளன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.