Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“முருக பக்தர்கள் மாநாடு… விரதம் இருக்கும் சேகர்பாபுவுக்கு நன்றி!” – இந்து முன்னணி தலைவர்
    மாநிலம்

    “முருக பக்தர்கள் மாநாடு… விரதம் இருக்கும் சேகர்பாபுவுக்கு நன்றி!” – இந்து முன்னணி தலைவர்

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “முருக பக்தர்கள் மாநாடு… விரதம் இருக்கும் சேகர்பாபுவுக்கு நன்றி!” – இந்து முன்னணி தலைவர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தேவகோட்டை: “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

    மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கொடுக்க இன்று (ஜூன் 19) சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்துக்கள், இந்து இயக்கங்கள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

    ஆறு படை வீடுகளை ஒரே இடத்தில் பக்தர்கள் பூஜிக்க ஏற்பாடு செய்தோம். அதற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுத்தனர். நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்பதற்காக அமைச்சர் சேகர்பாபு விரதம் இருக்கிறார். மாநாட்டுக்காக பலர் விரதம் இருக்கின்றனர். ஏதோவொரு வகையில் சேகர்பாபு விரதம் இருப்பதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    திமுக கூட்டணியினர் நாத்திக கூட்டணி. நக்கல் சிந்தனை உள்ளவர்கள், அதனால் ஏதாவது சொல்லி கொண்டே தான் இருப்பர். தமிழகத்தில் அதிக கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தியதாக கூறுகின்றனர். இதில் அரசு எவ்வளவு செலவு செய்தது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். முருக பக்தர்கள் மாநாடு பழநியில் நடத்தினார்கள். அது யாருடைய பணம்? சேகர்பாபு கொடுத்தாரா? முதல்வர் கொடுத்தாரா?

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் திரைப்பட பிரபலங்கள் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருகின்றனர். ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஒரே சமயத்தில் 5 லட்சம் பேர் கந்தசஷ்டி கவசம் பாட உள்ளனர்,” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    September 12, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    September 12, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

    September 12, 2025
    மாநிலம்

    “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை: திருமாவளவன் கருத்து

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கைவிடப்பட்டதா ஆமீர்கான் – லோகேஷ் படம்? 
    • திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்
    • தலையணைகளில் மஞ்சள் கறைகள் உங்கள் உடல்நலம் மற்றும் தூக்கம் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்
    • ஹோண்டுரான் மீன் மழை: இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான ‘மீன் மழையை’ காண்கிறது; அறிவியல் அல்லது புராணக்கதை? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.