Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டெல்லி மதராஸி முகாமில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சர் நாசர் வழங்கினார்
    மாநிலம்

    டெல்லி மதராஸி முகாமில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சர் நாசர் வழங்கினார்

    adminBy adminJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லி மதராஸி முகாமில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சர் நாசர் வழங்கினார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: டெல்லியில் வீடுகளை இழந்ததால் பாதிக்கப்பட்ட 370 மதராஸி முகாம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதார மீட்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் நாசர் நேற்று வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுதில்லி ஜங்புரா பகுதி, மதராஸி கேம்ப் குடிசைப் பகுதியில் வசித்து வந்த 370 தமிழ் குடும்பத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இடம் பெயர்ந்த தமிழ் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மீட்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் நேற்று டெல்லியில், நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது. பயனாளிகள் விவரங்களை சரிபர்த்து, ஆவணங்களை பெற 7 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு திரும்பவும் அங்கு விடப்பட்டனர். வீடு திரும்பும் வரை அவர்களுக்கான உணவு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

    பயனாளிகளுக்கான ரொக்கமாக ரூ.8 ஆயிரத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதால், தமிழ்நாடு இல்லத்திலேயே வங்கி முகவர்களை வரவழைத்து, வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு ஜன்தன் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. வயதான மற்றும் வீட்டிலிருந்து வெளிவர இயலாத பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

    அத்தகைய பயனாளிகளுக்கு அவர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கே சென்று தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எம்.நாசர் இந்த நிவாரண உதவியை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் மா.வள்ளலார், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் அஷிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!

    July 23, 2025
    மாநிலம்

    24, 25-ல் கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    July 23, 2025
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 23, 2025
    மாநிலம்

    முதல்வர் நலமுடன் இருக்கிறார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

    July 23, 2025
    மாநிலம்

    பிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் நூற்றாண்டு விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் அழைப்பு

    July 23, 2025
    மாநிலம்

    வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சிகள் – மதுரை சொத்து வரி விவகாரத்தில் ஒதுங்கி நிற்கும் திமுகவுக்கு பின்னடைவு?

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு
    • முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!
    • உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை
    • மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி
    • பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.