Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
    மாநிலம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை / தூத்துக்குடி: திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. கோயில் திருப்​பணி​களுக்​காக அமைக்​கப்​பட்ட குழு​வில் ஆகம நிபுணர்​கள் இடம் பெற​வில்​லை. கடலோர கட்​டுப்​பாட்டு மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் உரிய அனு​மதி பெறாமல் கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன.

    கோயிலில் 24 புனித தீர்த்​தங்​களில் நாழிக்​கிணறு என்ற தீர்த்​தம் மட்​டுமே தற்​போது உள்ளது. தீர்த்​தங்களின் பெயர்​களை குறிப்பிட்டு கல் தூண்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இந்த தூண்​கள் கோயில் திருப்​பணி​களின்​போது மறைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த கல் தூண்​களை மீண்​டும் நிறுவ வேண்​டும். கும்​பாபிஷேகத்​தின்​போது ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ளது. இதனால் கும்​பாபிஷேகத்​தின்​போது கருடன் வரு​வ​தில்​லை. ஹெலி​காப்​டரில் மலர் தூவும் நிகழ்​வுக்கு கோயில் நிதி செல​விடப்​படு​வது தவறு.

    கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு ஆகம நிபுணர்​கள் குழுஅமைக்​க​வும், 24 தீர்த்த தூண்களை மீண்​டும் அமைக்​க​வும், அது​வரை திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபி ஷேகம் நடத்த தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது.

    அறநிலை​யத் துறை தரப்​பில், “கும்​பாபிஷேகம் மற்​றும் திருப்​பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதை கண்​காணிக்க நீதி​மன்ற உத்தர​வின்​படி ஆகம நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்ளது” எனத் தெரிவிக்​கப்​பட்​டது. மனுதா​ரர் தரப்​பில், “கும்​பாபிஷேகத்​தின்​போது ஹெலி​காப்​டர் மூலம் மலர்​கள் தூவ அல்​லது புனித நீர் ஊற்​று​வது ஆகம விதி​களுக்கு எதி​ரானது” என வாதிடப்​பட்​டது.

    இதையடுத்து நீதிப​தி​கள், “நிம்மதி தேடி கோயிலுக்கு வரும் ஏழை பக்​தர்​கள் ஏமாற்​றப்​படு​கிறார்​கள். அவர்​களுக்கு குடிநீர், கழிப்​பறை போன்ற அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​படு​வ​தில்​லை. முதலில் அதற்கு தீர்வு காண வேண்​டும். திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேக விவ​காரத்​தில் ஏற்​கெனவே நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் நிபுணர் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. மனு​தா​ரர் தேவையெனில் இந்து சமய அறநிலை​யத் துறை இணை ஆணை​யரிடம் மனு அளிக்​கலாம். இந்த மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது’’ என உத்​தர​விட்​டனர்.

    பிரம்மாண்ட யாகசாலை: இதற்கிடையே கும்பாபிஷேக விழாவை யொட்​டி, விமான தளத்​தில் உள்ள மூல​வர், சண்​முகர், வள்​ளி, தெய்​வானை, பெரு​மாள்,நடராஜர் விமானக் கலசங்​களில் தங்​கத் தகடு​கள் பதிக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

    ராஜகோபுரத்​தின் கீழ்​பகு​தி​யில் பிரம்​மாண்ட யாக​சாலை அமைக்​கப்​படுகிறது. ஜூலை 1-ம் தேதி யாக​சாலை பூஜைகள் தொடங்குகின்​றன.திருச்​செந்​தூர் கோயில் கும்பாபிஷேக நன்​னீ​ராட்டு விழாவை தமிழில் நடத்த வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்​கிணைப்​பாளர் சீமான் மற்​றும் பல்​வேறு அமைப்​பினர் கோரிக்கை விடுத்து வரு​கின்றனர்.

    இந்​நிலை​யில், கோயில் நிர்​வாகம் சார்​பில் நேற்று வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில், “திருச் செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் திருக்​குட நன்​னீ​ராட்டு விழாநடை​பெறவுள்​ளது. இதற்காக 8 ஆயிரம் சதுரடி​யில் 76 ஹோமகுண்​டங்​களு​டன் பிரம்​மாண்ட வேள்​விச்சாலை அமைக்​கப்​படு​கிறது.

    வேள்​வி​ச்சாலை வழி​பாடு நாட்​களில் வேத​பா​ராயணம், திருமுறை விண்​ணப்​பம், நாகஸ்வர இன்னிசை நடை​பெறும். காலை 7 முதல் மதி​யம் 1 மணி வரை மற்​றும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரை 64 ஓது​வார் மூர்த்​தி​களைக் கொண்டு பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ், கந்​தர் அனுபூதி முதலான செந்​தமிழ் வேதங்​கள் முற்​றோதுதல் நடை​பெறும்” என கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    September 13, 2025
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    September 13, 2025
    மாநிலம்

    ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

    September 13, 2025
    மாநிலம்

    கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம்

    September 13, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா!

    September 13, 2025
    மாநிலம்

    பிரபல ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை: தமிழகம் முழுவதும் 20+ இடங்களில் அதிரடி

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிளாக்பிங்கின் லிசா – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போல அலங்கரிக்க 5 தந்திரங்கள்
    • தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்
    • திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்
    • சற்றே குறைந்த தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.160 குறைந்தது
    • அதிகரித்த இதய நோய் அபாயத்துடன் இணைக்கப்பட்ட மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ்: ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.