Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாளில் பதில் தர வேண்டும்: தவறினால் ஆட்சியர்களுக்கு ரூ.25,000 அபராதம்
    மாநிலம்

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாளில் பதில் தர வேண்டும்: தவறினால் ஆட்சியர்களுக்கு ரூ.25,000 அபராதம்

    adminBy adminJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாளில் பதில் தர வேண்டும்: தவறினால் ஆட்சியர்களுக்கு ரூ.25,000 அபராதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பொதுமக்கள் அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பிறப்பித்த உத்தரவு:

    பொதுவாக அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணைப்படி அதிகாரிகள் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதும் இல்லை, பதிலளிப்பதும் இல்லை.

    இதனால் அரசுக்கு அளித்துள்ள மனுக்களை பரிசீலிக்கக்கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இனி பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசுக்கு அளிக்கப்படும் மனுக்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

    அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

    July 24, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் அரசுக்கும், அதிகார வரம்புக்கும் இடையே மிகப்பெரிய பிளவு: அதிமுக விமர்சனம்

    July 24, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார் மோடி

    July 24, 2025
    மாநிலம்

    பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சென்னையில் தொடங்கியது 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம்!

    July 24, 2025
    மாநிலம்

    2 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

    July 24, 2025
    மாநிலம்

    முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு ரூ.37 கோடி பரிசு: ஆக.16 வரை முன்பதிவு செய்யலாம்

    July 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா!
    • மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்
    • ஆபரேஷன் சிந்தூர் பற்றி மாநிலங்களவையில் பிரதமர் மோடி 29-ம் தேதி உரையாற்றுகிறார்
    • புதுச்சேரியில் அரசுக்கும், அதிகார வரம்புக்கும் இடையே மிகப்பெரிய பிளவு: அதிமுக விமர்சனம்
    • நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.