Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் தடங்களில் 100% தானியங்கி சிக்னல் முறை – ‘கவாச்’ தொழில்நுட்ப மாற்றத்துக்கு தயார்
    மாநிலம்

    சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் தடங்களில் 100% தானியங்கி சிக்னல் முறை – ‘கவாச்’ தொழில்நுட்ப மாற்றத்துக்கு தயார்

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் தடங்களில் 100% தானியங்கி சிக்னல் முறை – ‘கவாச்’ தொழில்நுட்ப மாற்றத்துக்கு தயார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 100 சதவீதம் தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை – ரேணிகுண்டா மார்க்கம் கவாச் தொழில்நுட்பத்துக்கு (மேம்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு) மாறுவதற்கு எதிர்காலத்தில் தயாராக உள்ளது.

    ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களை வலிமைப்படுத்துவது, நவீன சிக்னல் முறை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர வழித்தடம் என்று அழைக்கப்படும் ரயில் தடங்களில் அமைக்கப்படுகிறது.

    பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், மொத்தம் 1,612 கி.மீ. தொலைவு வழித்தடம் முழுவதும் தானியங்கி சிக்னலை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தெற்கு ரயில்வேயில், சென்னை – ரேணிகுண்டா (134 கி.மீ) மற்றும் சென்னை – அரக்கோணம் (141 கி.மீ) உள்ளிட்ட வழித்தடங்கள் இதில் அடங்கும்.

    இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் மொத்தம் 275 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. இதன்மூலம் தங்க நாற்கர வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் முறை அமைக்கும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த முதல் மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் புத்தூர் – புடி மார்க்கத்தில் கணினி மயமாக்கப்பட்ட நவீன சிக்னல் முறை (தானியங்கி சிக்னல் முறை) வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முதல் திருப்பதி வரை ரயில்கள் தடையின்றி இயங்கும்.

    இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் ரயில்வே இணைந்து இப்பணிகளை மேற்கொண்டது. இதன்மூலம், ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க முடியும். சென்னை – ரேணிகுண்டா வழித்தடம் கவாச் தொழில்நுட்பத்துக்கு மாற தயாராக உள்ளது. இதன்மூலம் ரயில்களின் தாமதம் குறையும். பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இரண்டுக்கும் ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நெம்மேலி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

    July 25, 2025
    மாநிலம்

    ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உறுதி

    July 25, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

    July 25, 2025
    மாநிலம்

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு: செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 25, 2025
    மாநிலம்

    ‘நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ?’ – சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அச்சம்

    July 25, 2025
    மாநிலம்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நெம்மேலி மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
    • சிலருக்கு 100 மற்றும் அதற்கு அப்பால் வாழ உதவுகிறது; பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தலைவன் தலைவி’ விமர்சனம்: குடும்ப உறவுகளை அலசும் கலகல ஃபேமிலி என்டர்டெய்னர்! 
    • ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உறுதி
    • எடை இழப்புக்கு ஓக்ரா நீர்: நன்மைகள், அதை எவ்வாறு தயாரிப்பது, குடிக்க சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.