Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்
    மாநிலம்

    மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர்.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் தினமும் இப்பேருந்து களில் பயணம் செய்கின்றனர்.

    இந்நிலையில், விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து திமுக மாணவரணியினர் இன்று மேடை அமைத்திருந்தனர். தார்ச் சாலையை பெயர்த்து கம்புகள் ஊன்றி ஆர்ப்பாட்டத்துக்கான பதாகைகளை வைத்திருந்தனர். நேற்று இரவு முதல் இச்சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.

    சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்ததால் மாற்று வழியில் வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர். இதனால் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் எப்படி அனுமதி வழங்கினார்கள் எனத் தெரிய வில்லை. ஆளும் கட்சி என்பதாலும், மத்திய அரசை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதாலும் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

    இதைப் பார்த்து, எதிர்காலத்தில் மற்ற கட்சியினரும், இதே இடத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி கோருவர். இதனால் எங்களை போன்ற வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுவோம். இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குவதை போலீஸார் தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மனிதர்களைப் போலவே குரங்குகளும் பணத்தை இழக்கும் என்று அஞ்சுகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 18 அன்று என்ன நடந்தது: ஆண்டுகளில் மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “நான் என் காரில் அழுதேன்”: ராம ஜென்மபூமிக்கு சேலை அணிந்த பிறகு மசாபா குப்தாவை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை கங்கனா ரணாவத் நினைவு கூர்ந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எப்போதும் போல் உங்கள் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாத ஆடைகள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘எச்-1பிக்கு எட்டு முறை விண்ணப்பித்தேன், லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை’: என்ஆர்ஐ மனிதன் இந்தியாவுக்குத் திரும்ப முயற்சிப்பதாகக் கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.