Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ஜெகதீப் தன்கர்
    மாநிலம்

    “புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ஜெகதீப் தன்கர்

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – ஜெகதீப் தன்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: “நாட்டின் பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரீசனை செய்ய வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கோரினார்.

    புதுவைக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவர் இறுதி நாளான இன்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் முன்பாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது நாட்டின் கல்விப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும். இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்றாகும். இது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

    புதிய கல்விக் கொள்கை நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்தக் கொள்கை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், 2047-ஆம் ஆண்டில் பிரதமரால் திட்டமிடப்பட்டபடி நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதில் புதிய கல்விக் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

    ஆராய்ச்சி என்பது ஒரு தன்னிறைவு பெற்ற நாட்டின் ஆன்மாவாகும். மேலும் அது ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதையை வரையறுக்கிறது. நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருத்தமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, ​​உலகளவில் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் நாடு சிறந்த நிறுவனங்களை உருவாக்க முடியும். நாட்டின் கல்விச் சூழல் அமைப்பில் முதலீடு செய்வதைத் தொழில்களும் நிறுவனங்களும் பரிசீலிக்க வேண்டும்.

    இந்த முயற்சியானது கல்வியானது பண்டமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலால் இயக்கப்படக் கூடாது, மாறாக, இந்தியாவின் பாரம்பரிய குருகுல முறையுடன் ஒத்துப்போக வேண்டும், அறிவுப் பெறுதலுடன் பண்பு மேம்பாட்டை வலியுறுத்த வேண்டும். ‘சேவையாகக் கல்வி’ என்ற இந்த நெறிமுறை தற்போதைய வணிக மாதிரியுடன் முரண்படுகிறது.

    நமது நாகரிக, ஆன்மிக சாரத்திலிருந்து விலகி நாம் ஏன் பொறுமையின்றி செயல்பட வேண்டும்? மோதலுக்கு இடமில்லை. உரையாடல் இருக்க வேண்டும். இந்தியா எழுச்சி பெறும் நேரம் இது. நமது அரசியல்வாதிகள் எப்போதும் தேசிய நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்குச் செவிசாய்க்க வேண்டிய தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் நமக்கு ஏற்படும் சவால்கள் சிக்கலானதாகிவிடும்.

    சனாதன பெருமை மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. இழந்தது வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. மொழிகளில் நாம் எவ்வாறு பிரிக்கப்பட முடியும்? உலகில் வேறு எந்த நாடும் நம் நாடு போல் மொழிகளுக்குச் செழுமையாக இல்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் 22 மொழிகளில் பேசலாம். சனாதனம் நமக்கு ஒரே உன்னத நோக்கத்திற்காக ஒற்றுமையாக இருப்பதைத் தவிர வேறு எதையும் கற்பிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து புதுச்சேரி பயணத்தை நிறைவு செய்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவரைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?

    August 1, 2025
    மாநிலம்

    பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு

    August 1, 2025
    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

    August 1, 2025
    மாநிலம்

    ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    August 1, 2025
    மாநிலம்

    ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?
    • பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு
    • பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்
    • ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.