Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு
    உலகம்

    இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஹ்ரான்: இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் – இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள்.

    இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டதற்கு இணங்க, தங்​களது தரைவழி எல்​லைகளை திறந்​துள்​ள​தாக​வும், அதன் வழி​யாக மாணவர்​கள் பாது​காப்​பாக வெளி​யேறலாம் என்​றும் ஈரான் அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

    ஈரான் அரசு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “ஈரான் மீதான வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், பொது​மக்​கள் பாது​காப்​பாக நாட்டை விட்டு வெளி​யேறும் வகை​யில் அனைத்து தரைவழி எல்​லைகளும் திறந்​திருக்​கும். மாணவர்​கள் பாது​காப்​பாக செல்​லலாம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

    இந்​தி​யத் தூதரகம் ஏற்​பாடு: இந்​நிலை​யில், அங்​குள்ள இந்​தி​யர்​களை ஈரானுக்​குள்​ளேயே பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்​றும் பணி​களை இந்​திய தூதரகம் தொடங்​கி​யுள்​ளது. மேலும், விரை​வில் அவர்​களை இந்​தி​யா​வுக்கு திருப்பி அழைத்​து​வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ள​தாக தூதரகம் தெரி​வித்​துள்​ளது.

    3 நாட்கள் தூங்கவில்லை: ஈரானில் சுமார் 1,500-க்​கும் மேற்​பட்ட இந்​திய மாணவர்​கள் கல்வி பயில்​கின்​றனர். ஈரான் தலைநகர் தெஹ்​ரானை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் கடந்த சில நாட்​களாக குண்​டுமழை பொழிந்து வரு​கின்றன. இதுகுறித்து 3-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் மாணவர் இம்​தி​சால் மொகிதீன் கூறும்​போது, “தெஹ்​ரானில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் சுமார் 350 இந்​திய மாணவ, மாண​வியர் எம்​பிபிஎஸ் படித்து வரு​கின்​றனர். எங்​களது விடுதி அமைந்​துள்ள இடத்​துக்கு அரு​கில் குண்​டு​கள் வீசப்​படு​கின்​றன.

    கடந்த 3 நாட்​களாக நாங்​கள் தூங்​க​வில்​லை. விடு​தி​யின் அடித்​தளத்​தில் தஞ்​சமடைந்து உள்​ளோம். மிகுந்த அச்​சத்​துடன் வாழ்ந்து வரு​கிறோம். மத்​திய அரசு எங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார். இஸ்​ரேல் நாட்​டில் சுமார் 32,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பெரும்​பாலானோர் தொழிலா​ளர்​கள் ஆவர். அவர்​கள் பாது​காப்​பான இடங்​களில் தங்க வைக்​கப்​பட்டு இருப்​ப​தாக இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!
    • எங்கள் எழுதப்படாத சியோல் முடிவு விளக்கியது: மி ரே மற்றும் மி ஜி அவர்களின் புதிய பயணங்களை எவ்வாறு தொடங்கினார்கள் – மற்றும் சீசன் 2 இருக்குமா?
    • மூவரின் திட்டமிட்ட ‘கொடூரம்’ – கொல்கத்தா மாணவி வன்கொடுமை சம்பவத்தில் காவல் துறை புதிய தகவல்
    • திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
    • லூயிஸ் உய்ட்டன் குரூஸ் வடிவ கடை: லூயிஸ் உய்ட்டன் அதன் ஒரே பயண வடிவ கடையைத் திறந்தது, அதன் இருப்பிடம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.