Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரானுக்காக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?
    உலகம்

    ஈரானுக்காக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரானுக்காக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று ஈரான் படைகளின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் சுமார் 248 பேர் (ஈரான் 230 மற்றும் இஸ்ரேல் 18) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் ஈரான் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரியும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்சென் ரெசே,”இஸ்ரேல் ஈரான் மீது அணுகுண்டை வீசினால், இஸ்ரேலை அணு ஆயுதத்தால் தாக்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.

    பாகிஸ்தான் ‘ஈரானுக்குப் பின்னால் நிற்பதாக’ சபதம் செய்துள்ளதுடன், முஸ்லிம் உலகத்தை ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ஒரு ஏவுகணை பரிமாற்றத்தைத் தொடர்ந்து நட்புறவு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படாத மறைக்கப்பட்ட திறன்கள் இருக்கிறது” என்று கூறினார்.

    ICAN (சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பிரச்சாரம்) படி, இஸ்ரேலும் பாகிஸ்தானும் தற்போது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒன்பது நாடுகளில் அடங்கும்.

    இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தானிடமிருந்து எந்தக் கருத்தும் இதுவரை வரவில்லை. ஆனால் மேற்கத்திய உலகின் ஆதரவைப் பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.

    நேற்று இரவு இஸ்ரேலின் அணுசக்தி வலிமை குறித்து கவலைகளை எழுப்பிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், “இஸ்ரேலால் உருவாக்கப்படும் மோதல்கள் குறித்து மேற்கத்திய உலகம் கவலைப்பட வேண்டும். இது முழு பிராந்தியத்தை மட்டுமல்ல அதற்கு அப்பாலும் உள்ள பிராந்தியங்களையும் மூழ்கடிக்கும். முரட்டு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது பேரழிவை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறினார்.

    பாகிஸ்தான் மறுப்பு: இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்களுடைய அணுசக்தி என்பது எங்கள் மக்களின் நன்மைக்காக, எங்கள் நாட்டின் தற்காப்புக்காக உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று நாங்கள் எங்கும் வாக்குறுதி அளிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சிறுகோள்களில் உலோகங்கள்

    June 30, 2025
    உலகம்

    ‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

    June 30, 2025
    உலகம்

    ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

    June 30, 2025
    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
    • ஒரு நாய் கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்: நீங்கள் பின்பற்றக்கூடிய அத்தியாவசிய உதவிக்குறிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!
    • பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவில் பிரபலமான நினைவுச்சின்னங்கள்; சில யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள்
    • பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’  – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.