Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி
    தேசியம்

    குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறத் தொடங்கியது. இதில், இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 47 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், விஜய் ரூபானியின் உடலும் அடக்கம் என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் படேல் தெரிவித்துள்ளார். மீதமுள்ள உடல்களின் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    விஜய் ரூபானியின் உடல் உள்ள சவப் பெட்டியின் மீது மூவர்ணக்கொடி போற்றப்பட்டு, காவலர்கள் சுமந்து வந்தனர். உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ரிஷிகேஷ் படேல், ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.

    விஜய் ரூபானியின் மனைவியும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, விஜய் ரூபானியின் உடல் அங்கிருந்து ராஜ்கோட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

    47 உடல்கள் ஒப்படைப்பு: அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படாத உடல்கள், உறவினர்களின் வருகைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த டாக்டர் ரஜ்னீஷ் படேல், “சிவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட உடல்களில் 92 உடல்கள்களின் டிஎன்ஏ பொருத்தம் முடிக்கப்பட்டுள்ளது. இதில், 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இன்று (திங்கட்கிழமை) இரவுக்குள் மேலும் 2 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) 13 குடும்பங்கள் உடல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர் படேல் கூறினார். 21 பேரின் உடல்கள், அவர்களின் உறவினர்களுடன் மேலும் ஆலோசனை நடத்திய பிறகு ஒப்படைக்கப்படும்.

    இதுவரை, அகமதாபாத்தைச் சேர்ந்த 12, பரோடாவைச் சேர்ந்த ஐந்து, மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த தலா நான்கு, கெடா மற்றும் பருச் மாவட்டத்தைச் சேர்ந்த தலா இரண்டு, உதய்பூர், ஜோத்பூர், போடாட் மற்றும் ஆரவல்லியைச் சேர்ந்த தலா ஒன்று உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடலும் முழு கண்ணியத்துடன் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    July 1, 2025
    தேசியம்

    24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

    July 1, 2025
    தேசியம்

    பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்

    July 1, 2025
    தேசியம்

    மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆக. 1-ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’!
    • 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்
    • இதய நோய்: தோலில் தோன்றும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்
    • கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு
    • கால் இறுதி சுற்றில் நுழைந்தது பிஎஸ்ஜி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.