Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கனமழை: கேரளாவில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்
    தேசியம்

    கனமழை: கேரளாவில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கனமழை: கேரளாவில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட்டை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் 204.4 மிமீக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.

    கர்நாடகா நிலவரம்: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்ததை அடுத்து, கர்நாடகாவின் உடுப்பி மற்றும் தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகங்கள் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன.

    கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் மற்றும் ஹோசநகர் தாலுகாக்களில் கனமழை பெய்ததால், அந்தந்த தாசில்தார்கள் திங்கட்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்தனர்.

    மகாராஷ்டிரா மழை நிலவரம்: மும்பை, புனே மற்றும் நவி மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை பலத்த மற்றும் லேசான மழை பெய்தது. மேலும், மும்பையில் இன்று பிற்பகலில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம், இன்று மும்பைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜூன் 18 முதல் 21 வரை கோகன், கோவா மற்றும் மகாராஷ்டிரா, சவுராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 16 முதல் 17 வரை குஜராத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஆந்திரா நிலவரம்: ஜூன் 19 வரை ஆந்திராவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் (NCAP) மற்றும் யானம் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், அதனுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அசாம் நிலவரம்: கவுஹாத்தியில் அடுத்த இரண்டு-மூன்று நாட்களுக்கு மேகமூட்டமான வானிலை இருக்கும் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்
    • அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் – அதிர்ச்சி தகவல்களும், காவல் துறை அத்துமீறலும்!
    • முடிட் டானி யார், அவரது திருமணம் ஏன் செய்திகளில் அதிகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை
    • நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: இயக்குநர் கே.பாக்யராஜ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.