Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும்: திருச்சி பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் உரை
    மாநிலம்

    தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும்: திருச்சி பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் உரை

    adminBy adminJune 15, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும்: திருச்சி பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் உரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: தமிழக அரசியலின் திசைவழியை விசிக தீர்மானிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

    ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட்டில் தொடங்கிய பேரணியை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியானது குட்ஷெட் பாலம், தலைமை அஞ்சல் அலுவலகம், ஒத்தக் கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

    அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது: தமிழகத்தில் எல்லோரும் தேர்தல் கணக்குகளை பற்றி பேசிக் கொண்டிருக் கிறார்கள். யார் எந்தக் கூட்டணி, எத்தனை இடங்கள். யார் முதல்வர் என்ற கவலை நமக்கு இல்லை. திமுகவிடம் விசிக சிக்கிக் கொண்டு தவிக்கிறது என அரசி யல் அறியாமையில் அலையும் அற்பர்கள், அரைவேக்காடுகள் பேசுகின்றனர். தமிழக அரசியலின் திசைவழியை தீர் மானிப்பவர்கள் விசிகவினர்.

    இந்திய அரசியலையே மதச்சார் பின்மைக்கு எதிரானவர்கள், ஆதரவான வர்கள் என்று கூர்மைப்படுத்தும் அரசி யலை விசிக மட்டும் தான் முன்னெடுக்கி றது. இதன் வலிமையை உணராதவர்கள் திருமாவளவனுக்கு அரசியல் பண்ணத் தெரியவில்லை, பேரம் பேசவும். பிளாக் மெயில் செய்யவும் தெரியவில்லை, துணை முதல்வர் வேண்டும் என்றுகேட்க மறுக்கிறார் என்கின்றனர். முதல்வர் பதவியை பற்றியே நாங்கள் கவலைப்பட வில்லை. பிரதமர் பதவியை கைப்பற்றுங் கள் என்று தான் அம்பேத்கர் வழிகாட்டி உள்ளார். அது தான் அதிகாரம் உள்ள பதவி; அது தான் அரசு.

    எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திருமாவளவனுக்கு தெரியும். 25 ஆண்டுகள் தில்லுமுல்லு தேர்தல் அரசியலில் தாக்குப் பிடித்துள்ளது விசிக. சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டவர் கள் வழிதவறி போய்விட்டனர். இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விசிக உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. எங்களுக்கு யாருடைய அறிவு ரையும் தேவையில்லை.

    பேரணிக்கு அனுமதியில்லை: கூட்டணியில் இருந்தும் திருச்சியில் நாம் பேரணிநடத்த அனுமதியில்லை.பல இடங்களில் கொடியேற்ற, பொதுக் கூட் டம் நடத்த முடியவில்லை. 25 ஆண்டுகளாக இப்படி பல நெருக் கடிகள். இப்படித்தான் அடக்குமுறை, நெருக் கடிகளை தாக்குப்பிடித்து இந்த இயக்கம் கால்நூற்றாண்டு காலம் இந்தக்களத்தில் போராடி, இன்று தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.

    நாம் ஏன் திமுகவை ஆதரிக்கிறோம் ? திமுக கூட்டணியை விட்டு வெளியே நின்றால் என்ன ஆகிவிடும் ? யாரும் விசிகவை எதுவும் செய்ய முடியாது. நாம் அம்பேத்கர் பெரியார் பிள்ளைகள், மார்க்சின் கருத்தியல் வாரிசுகள் அதனால் ஒரு முடிவை துணிவாக எடுத்து உறுதியாக நிற்கிறோம். எங்களுக்கான காலம் கனியும் வரை காத்திருப்போம். தற்காலிக விளைச்சலுக்காக அவசர முடிவு எடுப் பவர்கள் நாங்கள் இல்லை. எங்களை நோக்கி அதிகாரம், நாற்காலிகள் வரும். எங்களை ஒரு ஓரமாக உட்காரு என்று சொன்னால், அதுதான் அந்த மேடையின் மையமாக மாறும்.

    திமுகவுடன் கொண்டிருக்கும் உறவு என்பது கொள்கை உறவு. இடங்களை பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய் வோம். திமுக அரசோடு இருக்கிற விமர்ச னங்களை தாண்டி தேர்தல் உறவை வைத்துக் கொள்கிறோம் என்றால், அது தொலைநோக்குப் பார்வையுடன் கொண்ட கொள்கை முடிவு. பலர் பல வேஷம் போடு கின்றனர்.

    சிலர் சினிமா புகழோடு ஹீரோ என்ற வேஷத்தோடு வந்துள்ளனர். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சினிமா ஹீரோவுக்கு பின்னால் செல் வார்கள் என்கிறார்கள். நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். அம் பேத்கரை ஏற்றுக் கொண்ட யாரும் எந்த விளம்பர மாயைக்கும் பணிய மாட்டான்; விலைபோகமாட்டான். அம்பேத்கர் அரசி யலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

    சினிமாக்காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் தான் கூட்டம் வரும். அம்பேத் கருக்கு உலகம் முழுவதும் வரும். தேர்தல் பேரம், வெற்றி தோல்வியை விட கூட்டணி கணக்குகளைவிட தேசம்முதன் மையானது. தமிழ் தேசியம் என்ற பெயரால் சிலர் திமுக வெறுப்பு அரசியலை மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக திராவிட அரசி யலையே எதிர்த்து. வெறுப்பு பரப்புவதன் மூலம் சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்கள். இதை நம் புரிந்துகொள்ள வேண்டும்.

    இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும். தேர்தலில் சீட் முக்கிய மல்ல; ஏற்ற கொள்கையில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும். தற்கா லிக அரசியல் பயனுக்காக தவறான முடிவை எடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

    பேரணி, பொதுக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம். பி.. எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன். எஸ்.எஸ்.பாலாஜி. ஆளூர் ஷாநவாஸ், மாநில பொதுச் செயலாளர் வன்னி அரசு, கடலூர், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர் சவுதி சி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    * இந்தியாவை மதச்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதற்குச் செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுத்து முறியடிப்போம்.

    * முஸ்லிம்களுக்கு எதிரான வக்ஃபு திருத்தச் சட்டத்தையும், குடியுரிமை திருத்தச்சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும்.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு தயாரிப்பை கைவிட வேண்டும்.

    * 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2014-ல் கைவிடப்பட்ட மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

    * ஜம்மு- காஷ்மீருக்கு மாநில தகுதி அளிக்கும் சட்ட நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    * மதம் மாறிய பட்டியல் சாதியினர், பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.

    * சச்சார் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சமவாய்ப்பு ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்

    August 13, 2025
    மாநிலம்

    போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு

    August 13, 2025
    மாநிலம்

    79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    • அவளுடைய நீண்ட ஆயுள் ரகசியம்? 87 வயதான ஷீலா ஐசக்ஸ் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறார்
    • ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
    • “உங்களை நேசிக்கிறோம்…” – ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
    • மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.