Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” – திருமாவளவன்
    மாநிலம்

    “இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” – திருமாவளவன்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு” – திருமாவளவன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு, இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    ஈரானின் அணுசக்தி சோதனைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீதும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் மீதும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த முக்கியமான அணு விஞ்ஞானிகளும், ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் அத்தகைய வலிமையை ஈரான் பெற்றுவிடக்கூடாது எனத் தடுப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

    உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவ நடவடிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் கண்டித்துள்ளார். ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா என உலகின் பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. ஆனால் இந்தியா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது.

    இதுவரை இந்தியா கடைப்பிடித்து வந்த அயலுறவுக் கொள்கையில் மோடி அரசு ஏற்படுத்திய மாற்றம் காரணமாகவே இந்தியா – பாகிஸ்தான் போரின் போது எந்த ஒரு நாடும் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை. மோடி அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது. இப்போதும் இஸ்ரேலை கண்டிக்காமல் மௌனம் காப்பதன் மூலம் மோடி அரசு மீண்டும் தவறிழைக்கிறது.

    ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் மூன்றாவது உலக யுத்தத்துக்கு வழி கோலக் கூடும். அது மட்டுமல்லாமல் உலக அளவில் அது கடுமையான பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தும். அந்த நெருக்கடியில் இந்தியாவும் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பிரச்சனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் இந்தியா இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு

    August 17, 2025
    மாநிலம்

    கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

    August 17, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

    August 17, 2025
    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்

    August 17, 2025
    மாநிலம்

    நீலகிரி, கோவையில் இன்று கனமழை

    August 17, 2025
    மாநிலம்

    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு
    • கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
    • சக்கர நாற்காலி கட்டுப்பட்ட பெண் மீண்டும் காலில் இறங்குகிறாள்; இந்த உணவு அவளுக்கு உதவியது என்று கூறுகிறது – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ சேவை
    • அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.