Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்: இபிஎஸ் விமர்சனம்
    மாநிலம்

    விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்: இபிஎஸ் விமர்சனம்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்: இபிஎஸ் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக பட்டியலிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.

    மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் ஆய்வுத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க திமுக மேற்கொண்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு. அவரது அரசில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது.

    அத்திக்கடவு–அவினாசி திட்டம் சுமார் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 35 மாத தாமதத்துக்கு பிறகு, நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை திறந்த போலி விவசாயி ஸ்டாலின், விவசாய கண்காட்சி விழாவில் மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக நாடக வசனம் பேசியுள்ளார். இத்திட்டத்தை மாநில நிதியிலேயே நிறைவேற்றியது எனது தலைமையிலான அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவர். திமுக அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 2-ம் கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.

    மேட்டூரில் காவிரியின் உபரி நீர், நீரேற்றுப் பாசனம் மூலம் நீரேற்றப்பட்டு, கால்வாய்கள் மூலம் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, பிறகு சரபங்கா நதியில் கலக்கும் இத்திட்டத்தின் பணிகள் எங்கள் ஆட்சியில் சுமார் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 50 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் முழுமை பெறவில்லை.

    தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. `நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை.

    தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதை சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன

    August 18, 2025
    மாநிலம்

    சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 

    August 18, 2025
    மாநிலம்

    சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறை, தகுதி விதிகளில் திருத்தம்

    August 18, 2025
    மாநிலம்

    ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.15 கோடி வருவாய் இழப்பு

    August 17, 2025
    மாநிலம்

    மதுரை மாநாடு வெற்றி பெற கோயிலில் கிடா வெட்டி விருந்தளித்த தவெகவினர்: பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்

    August 17, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன
    • ஆப்டிகல் மாயை: 23 களின் கடல் ஒரு ’22’ ஐ மறைக்கிறது, அதை எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க முடியும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 
    • அல்கலைன் நீர் புற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியுமா:? சிறந்த புற்றுநோயியல் நிபுணர் விளக்குகிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.