Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJune 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது கடந்த 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது நீதிமன்றத்தில் 2018-ல் போலீஸார் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி துரை தயாநிதி தரப்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி சண்முகவேல் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மனரீதியான பிரச்சினைகள் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்,” என்றார். அமலாக்கத்துறை வழக்கறிஞர், “துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்த முழுமையான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    August 18, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் நிறைவேற்றாததை 7 மாதத்தில் நிறைவேற்றுவார்களா? – திமுக மீது இபிஎஸ் விமர்சனம்

    August 18, 2025
    மாநிலம்

    சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

    August 18, 2025
    மாநிலம்

    தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து 1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை தகவல்

    August 18, 2025
    மாநிலம்

    ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி

    August 18, 2025
    மாநிலம்

    சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
    • தென்னிந்தியாவில் பொதுவாகக் காணப்படும் புளிப்பு இலைகள் புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா? இதைத்தான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 4 ஆண்டுகளில் நிறைவேற்றாததை 7 மாதத்தில் நிறைவேற்றுவார்களா? – திமுக மீது இபிஎஸ் விமர்சனம்
    • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
    • சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.