Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆந்திர எல்லையில் தமிழக மாங்காய் ஏற்றிய வாகனங்கள் தடுத்து நிறுத்தம் – விவசாயிகள் சாலை மறியல்
    மாநிலம்

    ஆந்திர எல்லையில் தமிழக மாங்காய் ஏற்றிய வாகனங்கள் தடுத்து நிறுத்தம் – விவசாயிகள் சாலை மறியல்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆந்திர எல்லையில் தமிழக மாங்காய் ஏற்றிய வாகனங்கள் தடுத்து நிறுத்தம் – விவசாயிகள் சாலை மறியல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வேலூர்: தமிழக மாங்காய் லோடு ஏற்றிய வாகனங்களை ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதால், அதிருப்தியடைந்த விவசாயிகள் பரதராமியில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரா வகை மாங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் மா விவசாயிகள் ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளை நம்பியே உள்ளனர். அதிக மகசூல் தரும் பெங்களூரா வகை மாங்காய்களை அறுவடை செய்ததும் லாரி, டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருவாய் ஈட்டி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலும் மா விவசாயம் அதிகளவில் இருப்பதால் அம்மாநில விவசாயிகளுக்கு அங்குள்ள பழச்சாறு தொழிற் சாலைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதனால், வேலூர் மாவட்ட மா விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாதித்து வருகின்றனர். தற்போது, ஆந்திர மாநிலத்தில் அதிகளவில் மாங்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து வரும் மாங்காய்களை வாங்க அம்மாநில பழச்சாறு தொழிற்சாலைகள் மறுத்து வருகின்றன.

    தமிழக – ஆந்திர எல்லையிலே மாங்காய் லோடுகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால், தமிழக விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளின் செயல்படுகளால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தமிழக – ஆந்திர எல்லையான பரதராமியில் மாங்காய் லோடு ஏற்றிய டிராக்டர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை பரதராமி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அதிருப்தி அடைந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, “ஆந்திராவில் மா விவசாயிகளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து மானியம் வழங்குவது போல் தமிழகத்திலும் விலை நிர்ணயம் செய்து மானியம் வழங்க வேண்டும். வேலூர் மாவட்ட நிர்வாகம் ஆந்திர மாநில அரசுடன் பேசி தமிழகத்தில் விளைச்சலான மாங்காய்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

    இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததால்முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், பரதராமியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நான் என் காரில் அழுதேன்”: ராம ஜென்மபூமிக்கு சேலை அணிந்த பிறகு மசாபா குப்தாவை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை கங்கனா ரணாவத் நினைவு கூர்ந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எப்போதும் போல் உங்கள் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாத ஆடைகள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘எச்-1பிக்கு எட்டு முறை விண்ணப்பித்தேன், லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை’: என்ஆர்ஐ மனிதன் இந்தியாவுக்குத் திரும்ப முயற்சிப்பதாகக் கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அமெரிக்கா இந்தியாவை விட 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது”: ஷோபா டி வேலையில் பெண்கள் மீது கூர்மையான கருத்து – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரிய சீசிலியன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் Gegeneophis valmiki | கொல்கத்தா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.