Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“2026 தேர்தல் ‘கூட்டணி ஆட்சி’க்கான காலம் அல்ல” – திருமாவளவன் கருத்து
    மாநிலம்

    “2026 தேர்தல் ‘கூட்டணி ஆட்சி’க்கான காலம் அல்ல” – திருமாவளவன் கருத்து

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “2026 தேர்தல் ‘கூட்டணி ஆட்சி’க்கான காலம் அல்ல” – திருமாவளவன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: “திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் என்பது அதற்கான காலம் அல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

    இது குறித்து அவர் இன்று (ஜூன் 13) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “விசிக சார்பில் நாளை மாலை திருச்சியில் ‘மதச்சார்பின்மையை காப்போம்’ என்கிற மையக்கருத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கு அறைகூவல் விடுக்கும் பேரணியாக அமையும். மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதலை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அதன் உத்திகளில் ஒன்றுதான் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வெறுப்பை பரப்பும் செயல். பாஜக அரசு திட்டமிட்டு வெறுப்பு அரசியலை ஆட்சி அதிகாரம் மூலம் பரப்புகிறது.

    பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கும், அதன் உயிர் மூச்சான மதச்சார்பின்மைக்கும் எதிராக செயல்படுகிறது. அவற்றை காக்க இந்த பேரணி. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கட்டவிழ்த்து அதன் மூலம் பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை செய்து வருகிறார்கள்.

    கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டை காக்கவும், அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையை காக்கவும் பேரணி நடத்துகிறோம். கட்சி சார்பற்ற முறையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் இந்தியா கூட்டணியிலும், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் பாஜக தலைமையிலும் அணி சேர்ந்துள்ளார்கள். தேர்தலை மையப்படுத்தி முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது பாஜக.

    அகமதாப்பாத்தில் நடந்த விமான விபத்து இந்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

    திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. அதிக எதிர்ப்பார்ப்புகள் உண்டு. கட்சி நலன் முக்கியமானது. அதை விட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே, எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் அதற்கான காலம் அல்ல.

    திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது மாயத் தோற்றம். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கிறோம். 2026-ல் பாஜக ஆட்சி என கூறும் அண்ணாமலை, பாஜக கூட்டணியை சிதைக்க பார்க்கிறார். தான் இல்லாமல் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்ததையும், வேறு கட்சிகளை அவர்கள் கூட்டணியில் சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை.

    உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். அதைக் கூறி ஒரு ஆட்சியை வீழ்த்த முடியாது. ஊழல் மிகப் பெரிய பிரச்சனைதான் அதை விட மேலான பிரச்சனைகள் உள்ளன. ஊழலை விட மதவாத, சாதியவாதம் தீங்கானது. மத வெறி, சாதி வெறி மக்களை சிந்திக்க விடாது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும்” என்றார் திருமாவளவன்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா

    August 18, 2025
    மாநிலம்

    ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

    August 18, 2025
    மாநிலம்

    தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள்

    August 18, 2025
    மாநிலம்

    சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி

    August 18, 2025
    மாநிலம்

    தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்!

    August 18, 2025
    மாநிலம்

    மதுரையில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெகவினருக்கு விஜய் அழைப்பு

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்
    • அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!
    • ‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா
    • இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகள் மற்றும் இந்த இயற்கை அதிசயங்களை எங்கே காணலாம்
    • ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.