Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” – குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்
    தேசியம்

    “விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” – குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” – குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தானும் விஜய் ரூபானியும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்று (ஜூன் 12) மதியம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், இன்று காலை அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார்.

    இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி விஜய் ரூபானியின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், விஜய் ரூபானியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

    இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், “விஜய் ரூபானிஜியின் குடும்பத்தினரை சந்தித்தேன். விஜய் ரூபானி நம்மிடையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் அவரை பல பத்தாண்டுகளாக அறிவேன். மிகவும் சவாலான சில காலகட்டங்கள் உட்பட, நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றி உள்ளோம்.

    விஜய் ரூபானி பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியானவராகவும் இருந்தார். பதவிகளில் உயர்ந்து, அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, குஜராத்தின் முதலமைச்சராக விடாமுயற்சியுடன் பணியாற்றியவர் அவர்.

    ராஜ்கோட் மாநகராட்சியாக இருந்தாலும் சரி, மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தாலும் சரி, குஜராத் பாஜக தலைவராக இருந்தாலும் சரி, மாநில அரசில் கேபினட் அமைச்சராக இருந்தாலும் சரி, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பணியிலும் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டிக் கொண்டார்.

    விஜய் ரூபானி குஜராத் முதல்வராக இருந்தபோது நானும் அவரும் விரிவாகப் பணியாற்றினோம். குஜராத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். குறிப்பாக குஜராத் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். நாங்கள் நடத்திய சந்திப்புகளை எப்போதும் போற்றுவேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்

    August 18, 2025
    தேசியம்

    ‘முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்’ – சிபிஆர் பெயரின் சுவாரஸ்யப் பின்னணி!

    August 18, 2025
    தேசியம்

    இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது

    August 18, 2025
    தேசியம்

    ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

    August 18, 2025
    தேசியம்

    வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

    August 18, 2025
    தேசியம்

    சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆதாரை ஏற்காதது ஏன்? – தலைமை தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்
    • அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!
    • ‘அதிமுக பலவீனமாக உள்ளது; அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரி செய்ய முடியும்’ – சசிகலா
    • இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகள் மற்றும் இந்த இயற்கை அதிசயங்களை எங்கே காணலாம்
    • ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.