Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“கடவுள்தான் காப்பாற்றினார்” – 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண்
    தேசியம்

    “கடவுள்தான் காப்பாற்றினார்” – 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கடவுள்தான் காப்பாற்றினார்” – 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி பாப்பா (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்கக் கூறுகிறார்.

    அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் விமானத்தில் பயணித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதால் பூமி சவுகான் என்பவர் உயிர் பிழைத்திருக்கிறார்.

    குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான், லண்டனில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பூமி சவுகான், நேற்று ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்குப் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார்.

    விமான நிலையத்துக்குச் செல்ல நேற்று அவர் புறப்பட்டபோது அகமதாபாத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடம் தாமதமாகிவிட்டது. அந்த விமானத்தில் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுடன் அவர் எவ்வளவோ பேசிப் பார்த்துள்ளார். எனினும், விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த பூமி சவுகான், “நான் 10 நிமிடத்தில் விமானத்தைத் தவறவிட்டேன். நான் கெஞ்சினேன், ஆனால் அவர்கள் என்னை ஏற அனுமதிக்கவில்லை. நான் மதியம் 1:30 மணியளவில் விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன். விமானம் சுமார் 1:38 மணியளவில் புறப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அது விபத்துக்குள்ளானது. நான் என்ன உணர்கிறேன் என்பதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

    கடவுளுக்கு நன்றி. என் கணபதி பாப்பா என்னைக் காப்பாற்றிவிட்டார். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் இப்போது முற்றிலும் வெறுமையாக உள்ளது.

    லண்டனில் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். 2 வரும் ஆகிவிட்ட நிலையில், குறுகிய விடுமுறையைப் பயன்படுத்தி நான் இந்தியா வந்தேன். இந்தப் பயணத்திற்காகவும், குடும்பத்தைப் பார்க்கவும், என் நாட்டின் காற்றை மீண்டும் சுவாசிக்கவும் நான் ஆவலுடன் காத்திருந்தேன். நான் விமான நிலையத்தில் இருந்து அப்படி வெளியேறுவேன் என நினைக்கவில்லை. ஆனால், அந்த பயணம் பலருக்கு இறுதியானதாக ஆகிவிட்டது. அவர்கள் யாரும் இதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    இழப்பைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். அது நானாக இருந்திருக்கலாம். அது நானாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ காரணத்திற்காக, கடவுள் கணபதி பாப்பா என்னை காப்பாற்றிவிட்டார்.

    நான் செய்தியைப் பார்த்தபோது… அதே விமான எண், அதே விமான நிலையம், அதே சேருமிடம்… என் கால்கள், கைகள் நடுங்க ஆரம்பித்தன. என் அம்மா என்னைப் பிடித்து அழுதார்.

    நான் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னைக் காப்பாற்றியவர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு

    July 4, 2025
    தேசியம்

    குகி ஆயுத குழுக்கள் உடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர மணிப்பூர் அமைப்புகள் கோரிக்கை

    July 4, 2025
    தேசியம்

    தலாய் லாமா விவகாரம்: சீனாவுக்கு எதிர்வினையாற்ற கிரண் ரிஜிஜு மறுப்பு

    July 4, 2025
    தேசியம்

    முஸ்லிம்களை மராத்தி பேசவைக்க ராஜ் தாக்கரேவுக்கு துணிவு இருக்கிறதா? – நிதேஷ் ரானே

    July 4, 2025
    தேசியம்

    தன்னாட்சியை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சிறந்த எடுத்துக்காட்டு: அமித் ஷா

    July 4, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பொன்முடியின் வெறுப்பு பேச்சு குறித்து விசாரிக்க தயங்கினால் சிபிஐக்கு மாற்ற நேரிடும்: போலீஸாருக்கு கோர்ட் எச்சரிக்கை
    • அமெரிக்காவின் ரகசிய செரெங்கேட்டி: அமெரிக்காவில் இருந்ததை நீங்கள் அறியாத வனவிலங்கு இயக்கிகள்
    • கே.எம்.காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழக அரசு அறிவிப்பு
    • உங்கள் வயதில் பாதி பார்க்க விரும்புகிறீர்களா? ஸ்வேதா திவாரியின் 10 சிறந்த தோற்றத்தை நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள்
    • இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட்: சிராஜ், ஆகாஷ் அபாரம் | ENG vs IND 2-வது டெஸ்ட்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.