Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்?” – அன்புமணி கேள்வி
    மாநிலம்

    “மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்?” – அன்புமணி கேள்வி

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்?” – அன்புமணி கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

    விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யாமல் துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

    அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதனால், அந்தத் திட்டத்தை குறைந்தது இரு வாரங்களுக்கு முன்பாவது அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகும் கூட அத்திட்டத்தை அறிவிக்காதது விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

    அதேபோல், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2500, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2,545 வீதம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் முதலமைச்சர், அதை ஏதோ தமது அரசின் சாதனை போல கூறியிருக்கிறார். நெல்லுக்கு தமிழக அரசு வழக்கமாக வழங்கி வரும் கொள்முதல் விலையை முறையே ரூ.26 வீதமும், ரூ.36 வீதமும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது ஒன்றும் சாதனையல்ல.

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது போதுமானதல்ல. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் மத்திய அரசிடம் பேசி கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,700 வீதம் உயர்த்தச் செய்ய வேண்டும். மாநில அரசு அதன் பங்காக ரூ.800 ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும்.

    பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒடிசாவில் குவிண்டாலுக்கு ரூ.800 வீதமும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலங்கானாவில் குவிண்டாலுக்கு ரூ.500 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை ரூ.800 ஆக உயர்த்துவது சாத்தியமற்றதல்ல. ஆனால், அவ்வாறு செய்ய தமிழக ஆட்சியாளர்களுக்கு மனம் தான் வரவில்லை.

    விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப்பதாகக் கூறும் தமிழக அரசு, அது உண்மை என்றால் நெல்லுக்கான கொள்முதல் விலைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.800 ஆக உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, வழக்கமான பொருள்களுடன் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் சேர்த்து குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

    August 19, 2025
    மாநிலம்

    இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

    August 18, 2025
    மாநிலம்

    “நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்!

    August 18, 2025
    மாநிலம்

    கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    August 18, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் பரவும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    August 18, 2025
    மாநிலம்

    புனரமைப்பு முடிந்து அக்டோபரில் காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
    • எடை அதிகரிக்காமல் அதிக உணவை எப்படி சாப்பிடுவது: ஊட்டச்சத்து நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட உணவு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹோட்டல் படுக்கைகளின் கீழ் மறைக்கப்பட்ட ஆபத்துகள்? விமான உதவியாளர் கட்டாயம் அறிய வேண்டிய ஹேக் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முடி வளர்ச்சி: இந்த யோகா போஸில் உட்கார்ந்திருக்கும்போது முடியை சீப்புவது முடி வளர்ச்சியைத் தூண்டும் என்று நம்பப்படுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.100+ கோடி வசூலித்த ‘சு ஃப்ரம் சோ’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.