Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் – சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    மாநிலம்

    நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் – சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் – சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சேலம்: “விவசாயிகள் இனி, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 4-வது ஆண்டாக உரிய காலத்தில் நீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

    உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், நெல் குவிண்டாலுக்கு இனி விவசாயிகள் ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131 ம், சன்ன ரகத்துக்கு ரூ.156ம் என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சாதாரண ரகம் ரூ.2 ஆயிரத்து 500 எனவும், சன்ன ரகம் ரூ.2 ஆயிரத்து 545 எனவும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர்,” என்று கூறினார்.

    மாணவி ராஜேஸ்வரிக்கு வீடு: முதல்வர் ஸ்டாலின், ஐஐடி சேர்க்கைக்கான, ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற சேலம் மாவட்டம் கருமந்துரை மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியை, விழா மேடையில் பாராட்டி, அவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடு, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் ஆகியவற்றை வழங்கினார். மாணவியின் உயர்கல்விக்கான செலவினை, தமிழக அரசு ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மேயர் ராமச்சந்திரன், எம்.பி-க்கள் செல்வகணபதி, மலையரசன், மாதேஸ்வரன், மணி, முன்னாள் எம்எல்ஏ, சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரோடு ஷோ: முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து சேலம் வரும் வழியில் திமுக சார்பில் ஆங்காங்கே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமலூரில், சாலை சந்திப்பு பகுதியில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு இடையே சுமார் 1 கிமீ., நடந்து, ரோடு ஷோ வந்த முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுடன் கை குலுக்கியதுடன், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும், பெரியார் பல்கலைக் கழக வளாகத்துக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, துணைவேந்தர் பொறுப்புக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பெரியாரின் திருவுருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது, பல்கலைக் கழக மாணவிகளிடம் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’

    July 29, 2025
    மாநிலம்

    “பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

    July 29, 2025
    மாநிலம்

    மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

    July 29, 2025
    மாநிலம்

    “திமுகவினர் ரத்தம் சிந்தி உழைத்ததால்தான் நீங்கள் எம்.பி…” – சு.வெங்கடேசன் மீது மேயர், கவுன்சிலர்கள் கொந்தளிப்பு

    July 29, 2025
    மாநிலம்

    நீதித்துறை செயல்பாட்டில் ஓய்வு நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல: வாஞ்சிநாதன் வழக்கில் நீதிபதிகள் கருத்து

    July 29, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘தனியார் பள்ளிக்கு வெறும் ரூ.1 வாடகைக்கு மதுரை மாநகராட்சியின் 2 ஏக்கர் இடம்’ – துணை மேயர் ‘பகீர்’
    • உங்கள் முகப்பரு உண்மையில் ஒரு பூஞ்சை தொற்று என்பதை எப்படி அறிவது: பூஞ்சை முகப்பரு என்றால் என்ன, அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் பல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
    • முட்டைகளை சாப்பிடுவது மோசமான கொழுப்பைக் குறைக்கலாம், பழைய நம்பிக்கைக்கு மாறாக, புதிய ஆய்வைக் காணலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.