Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வடபழனியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: ரூ.481 கோடியில் ஒப்பந்தம்
    மாநிலம்

    வடபழனியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: ரூ.481 கோடியில் ஒப்பந்தம்

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வடபழனியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்: ரூ.481 கோடியில் ஒப்பந்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பணிமனை வளர்ச்சி திட்டம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.481.3 கோடியில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சி திட்டம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ.481.3 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டம், சென்னையின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த, பல்நோக்கு வசதி கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீரான போக்குவரத்து இயக்கம், 2,801 சதுர மீட்டர் திறந்தவெளி ஒதுக்கீடு மற்றும் 2,304 சதுர மீட்டர் பூங்கா/தோட்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: தரை தளத்தில் அமைக்கப்படும் நவீன பேருந்து நிலையத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,06,762 சதுர மீட்டர்கள் ஆகும். இரு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 214 நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதி வழங்கப்படும். முதல் தளத்திலிருந்து 10-வது தளம் வரை அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

    இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமையவுள்ளன. பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக ஒரு பிரத்யேக உணவு மையம் மற்றும் உணவகங்கள் 5-வது தளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள் தரை தளத்தில் அமைந்திருக்கும். மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகள் (solar panels) அமைக்கப்படும். இத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

    July 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 29, 2025
    மாநிலம்

    செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

    July 29, 2025
    மாநிலம்

    கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    July 29, 2025
    மாநிலம்

    நீதிபதிகளை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியது என்ன?

    July 29, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் என்ன? – பட்டியலிட அண்ணாமலை வலியுறுத்தல்

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
    • விவசாயிகளின் சிக்கல்களை பேசும் ‘உழவர் மகன்’
    • பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்
    • ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய சிவப்பு உதட்டுச்சாயத்தின் 5 சின்னமான நிழல்கள் – இந்தியாவின் நேரங்கள்
    • செவ்வாய் கிரகங்கள் மற்றும் ஆழமான விண்வெளி பயணங்களில் ஆரோக்கியமான விண்வெளி வீரர் வாழ்க்கைக்கு விண்வெளியில் வளரும் தாவரங்கள் முக்கியம் என்பதை நாசா நிரூபிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.