Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் தொற்று – சுகாதார துறை அமைச்சர் தகவல்
    மாநிலம்

    தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் தொற்று – சுகாதார துறை அமைச்சர் தகவல்

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் தொற்று – சுகாதார துறை அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு கடந்த 2021-22-ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 90.5 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 39.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல, பேறு கால சிசு உயிரிழப்பு 2021-22-ம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    கடந்த ஒரு மாதமாக நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 19 மாதிரிகளை புனே வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அது ஒமைக்ரான் வகை என்று கண்டறியப்பட்டது. அது வீரியமற்றது. பெரிய அளவில் உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அறிவியல் ரீதியாக தெரியவந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு 3 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர்.

    மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், இதுபோன்ற வீரியமற்ற கரோனா வைரஸ் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. எனவே, மக்கள் பதற்றப்பட வேண்டாம். அதேநேரம், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதார துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், உலக சுகாதார நிறுவன மகப்பேறு மருத்துவ அலுவலர் பிரியங்கா சிங், கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், இணை இயக்குநர்கள் நிர்மல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்எல்ஏ – நடந்தது என்ன?

    July 29, 2025
    மாநிலம்

    “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்து தனிமை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர்” – ராஜேந்திர பாலாஜி கண்ணீர்

    July 29, 2025
    மாநிலம்

    நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

    July 29, 2025
    மாநிலம்

    பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம்

    July 29, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 29, 2025
    மாநிலம்

    செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
    • கேள்வி எழுப்பிய இளைஞரை திட்டிய சங்கராபுரம் திமுக எம்எல்ஏ – நடந்தது என்ன?
    • மெக்னீசியம் காணாமல் போன ஊட்டச்சத்தாக இருக்கலாம் உங்கள் மூளை மூளை மூடுபனியை எதிர்த்துப் போராட வேண்டும் மற்றும் இயற்கையாகவே கவனம் செலுத்த வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு குழந்தை விண்வெளியில் பிறக்க முடியுமா? விஞ்ஞானி விண்வெளி பிறப்பின் சாத்தியத்தையும் அபாயங்களையும் விளக்குகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.