Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்
    மாநிலம்

    விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விருதுநகர்: காரி​யாபட்டி அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்​தில் 3 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 3 பேர் காயமடைந்​தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்​திர சேகரன் என்​பவருக்​குச் சொந்​த​மான பட்​டாசு ஆலை விருதுநகர் மாவட்​டம் காரி​யாபட்டி அரு​கேயுள்ளவடகரை கிராமத்​தில் உள்ளது. இங்கு 30-க்​கும் மேற்​பட்ட அறை​களில் பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 60-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் இங்கு பணி​யாற்றி வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில், நேற்று காலை ஓர் அறை​யில் எதிர்​பா​ராத​வித​மாக வெடி விபத்து ஏற்​பட்​டது. இதில், அந்​தக் கட்​டிடம் முழு​வதும் இடிந்து தரைமட்​ட​மானது. அங்கு பணி​யாற்​றிக் கொண்​டிருந்த தொழிலா​ளர்​கள் கல்​குறிச்சி சவுடம்​மாள் (53), தண்​டியனேந்​தல் கருப்​பையா (35) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், முரு​கன் (45), பேச்​சி​யம்​மாள் (43), கணேசன் (43), மாரி​யம்​மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்​தனர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்​கள் தீயை அணைத்​து, மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். உயி​ரிழந்த 2 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக விருது நகர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயி​ரிழந்​தார். காயமடைந்த மற்ற 3 பேருக்கும் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது.

    விபத்து நேரிட்ட பட்​டாசு ஆலை​யின் உரிமம் உனடி​யாக ரத்து செய்​யப்​பட்​டது. விபத்து தொடர்​பாக காரி​யாபட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, ஆலை மேலா​ளர் கல்​குறிச்சி வீரசேகரன் (53), போர்​மேன் கனி​முரு​கன் (23) ஆகியோரைக் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது.விபத்​தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

    அப்​போது, அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கூறும்​போது, “பட்​டாசு ஆலை விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்​டு, நடவடிக்கை எடுக்​கப்​படும். உயிரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்​தவர்​களுக்​கும் உரிய நிவாரணம் வழங்​கப்படும்” என்​றார்.

    ரூ.4 லட்​சம் நிவாரணம்

    இதற்கிடையே, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்​தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்​சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம்​ வழங்​க உத்​தர​விட்​டுள்​ளேன்​’ என்​று தெரிவித்துள்ளார்.

    தொடர் கண்காணிப்பு தேவை

    இந்நிலையில், பட்​டாசு ஆலைகளில் விபத்​தைத் தடுக்​கும் வகை​யில், தொடர் கண்​காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்​டும் என தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    August 19, 2025
    மாநிலம்

    ஐ.பெரியசாமி வீடுகளில் சொத்து ஆவணங்கள்: அமலாக்கத் துறை பறிமுதல்

    August 19, 2025
    மாநிலம்

    பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆளுநர் ஆகிறார்?

    August 19, 2025
    மாநிலம்

    கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாலம்: உதயநிதி திறந்து வைத்தார்

    August 19, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் சீரழிகின்றனர்: பழனிசாமி குற்றச்சாட்டு

    August 19, 2025
    மாநிலம்

    ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சி.பி.ஆர்.
    • ஷாருக்கானை ஓய்வு பெற சொன்ன ரசிகர்!
    • சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    • 10 மாரடைப்புக்கு வழிவகுக்கும் கரோனரி தமனி நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார்’ – மக்களவையில் ஜிதேந்திர சிங் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.