Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்: மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000
    தேசியம்

    ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்: மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000

    adminBy adminJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம்: மாணவர் அம்மாவின் வங்கி கணக்கில் ரூ.15,000
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவி வகிக்கிறார். இந்த கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

    ‘சூப்பர் சிக்ஸ்’ வாக்குறுதிகள்: தேர்தலின்போது இக்கூட்டணி சார்பில் `சூப்பர் சிக்ஸ்’ என்ற வாக் குறுதி அளிக்கப்பட்டது. அவற்றை ஒவ்வொன்றாக சந்திரபாபு நாயுடு அரசு அமல்படுத்தி வருகிறது.

    ஏற்கெனவே அண்ணா கேன்டீன், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் திட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று (ஜூன் 12) முதல் அமலுக்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

    ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    ஒன்றாம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    மாணவர்களுக்கு வாழ்த்துகள்… ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் லோகேஷ், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்தார். அப்போது ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான ‘தாய்க்கு வந்தனம்’ திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர். இதனால் நான் தாய்மார்களுக்கு பாராட்டுகளையும், இன்று முதல் பள்ளிகளுக்குச் செல்ல உள்ள மாணவர்களுக்கு வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    நிபந்தனைகள் என்ன? – இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, வீட்டில் எத்தனை பேர் படித்தாலும் அனைவருக்கும் தலா ரூ.15,000 வீதம் வழங்கப்படும். ஆனால் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்தல் அவசியம். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் பயனளிக்கும்.

    பள்ளிகளில் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகளின் கல்விச் சான்றிதழ், ஆதார், தாய்மார்களின் வங்கிக் கணக்கு விவரம், தாயின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ், தேவைப்பட்டால் வருமானச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

    July 4, 2025
    தேசியம்

    ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

    July 4, 2025
    தேசியம்

    அமர்நாத் யாத்திரை தொடக்கம்

    July 4, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது

    July 4, 2025
    தேசியம்

    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

    July 3, 2025
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்
    • மூளை சாப்பிடுவது அமீபா: இந்த அமைதியான அச்சுறுத்தலை எவ்வளவு வெப்பமான வானிலை எரிபொருள்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
    • தமிழரசி எம்எல்ஏவுடன் திலகபாமா வாக்குவாதம்
    • மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எல்லா இடங்களிலும் உள்ளது: உங்கள் வெளிப்பாட்டை எளிதில் குறைப்பது எப்படி – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.