Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘குமரி கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிடுக’ – கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
    மாநிலம்

    ‘குமரி கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிடுக’ – கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

    adminBy adminJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘குமரி கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிடுக’ – கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகர்கோவில்: குமரியில் கடலையும், கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களை கைவிடக் கோரி சின்னமுட்டம் பகுதியில் இன்று (ஜூன் 11) மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

    கன்னியாகுமரி ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிக போக்குவரத்தால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, இந்தத் திட்டங்களை கைவிடக் கோரி கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் இன்று குடும்பத்துடன் கடலில் இறங்கி கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது “பாதுகாத்திடு! பாதுகாத்திடு! கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு!” “அழிக்காதே! அழிக்காதே! கடலையும் கடற்கரையையும் அழிக்காதே!”, “இழப்பீடு வழங்கு! கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்கு!” என கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில், குமரி தெற்கு கடல் பகுதியில் 27155 சதுர கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் காற்றாலை திட்டத்தை கைவிட வேண்டும்.

    கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரையிலான அணுக் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிள்ளியூர் தாலுகாவில் 1144 ஹெக்டேர் நிலங்களில் உள்ள அணுக் கனிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர்களின் பாதுகாப்புக்காக, எதிர்பாராத கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இப்போராட்டத்துக்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமையேற்றனர். துணைத் தலைவர் கமலஸ், செயலர் ஆரோக்கியம், மற்றும் ஊர் உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்

    September 17, 2025
    மாநிலம்

    என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

    September 17, 2025
    மாநிலம்

    திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    September 17, 2025
    மாநிலம்

    தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி

    September 17, 2025
    மாநிலம்

    பழனிசாமி நாளை டெல்லி பயணம்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்வதாக விளக்கம்

    September 17, 2025
    மாநிலம்

    117-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: அண்ணா படத்துக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு
    • சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 337 ரன்கள் குவிப்பு
    • இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்
    • 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக டெல்லியில் இந்தியா – அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை
    • கிர்க்லேண்ட் கையொப்பம் புரோசெக்கோ மற்றும் அதன் ஆபத்தானது: ‘திரும்ப வேண்டாம்’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.