Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு பொருத்த ரயில்வே அமைச்சகம் திட்டம்
    தேசியம்

    மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு பொருத்த ரயில்வே அமைச்சகம் திட்டம்

    adminBy adminJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவு பொருத்த ரயில்வே அமைச்சகம் திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: மும்பை ரயில் விபத்தைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதத்துக்குள் தானியங்கி கதவுகளுடன் கூடிய புறநகர் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ராவில் நேற்றுமுன்தினம் கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகள் ஒருவருக்கொருவர் மோதி தண்டவாளத்தில் விழுந்தனர். இதில், ரயில்வே காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து, ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரயில்வே நிர்வாகம் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பை புறநகர் ரயில்களில் வரும் நவம்பர் மாதத்துக்குள் தானியங்கி கதவுகளை பொருத்தி அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்குள் அவற்றின் சேவையை தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மூத்த ரயில்வே வாரிய அதிகாரிகளுடன் இணைந்து சென்னை ஐசிஎப் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, தானியங்கி கதவு முறையில் உள்ள சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்குமாறு அமைச்சர் அவர்களிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் இயற்கையான காற்றோட்டத்தை அனுமதிக்கும் ரயில் பெட்டிகளில் கதவுகள் வடிவமைக்கப்பட இருக்கின்றன. இரண்டாவதாக, பெட்டிகளுக்குள் புதிய காற்றை அனுமதிக்க ஏதுவாக ரயில் மேற்கூரையில் காற்றோட்ட அலகுகள் நிறுவப்படும். மூன்றாவதாக, ரயிலுக்குள் கூட்டத்தை சிறப்பாக பகிர்ந்து கொள்வதையும், பயணிகள் சுதந்திரமான நடமாட்டத்தையும் உறுதி செய்ய ரயில் பெட்டிகளுக்கு இடையில் வெஸ்டிபுல்ஸ் எனப்படும் தாழ்வாரங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ரயில்வேயில் 7 ஏசி பெட்டிகள் உட்பட 157 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, மேற்கு ரயில்வேயில் 8 ஏசி ரயில்கள் உட்பட மொத்தம் 95 புறநகர் ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் தோல்வி எதிரொலி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு

    December 2, 2025
    தேசியம்

    “முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டது” – பிரதமர் மோடி

    December 2, 2025
    தேசியம்

    ‘ராகுல் எங்கள் தலைவர்; அவருக்கு ஊக்கம் கொடுத்தோம்’ – கர்நாடக முதல்வர் சித்தராமையா @ டெல்லி

    December 2, 2025
    தேசியம்

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஸ்பெண்ட்: பாஜக மேலிடம் நடவடிக்கை

    December 2, 2025
    தேசியம்

    தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

    December 2, 2025
    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரோஸ்மேரி எண்ணெய் முடி உதிர்தல் மற்றும் பொடுகுக்கு உங்கள் தீர்வாக இருக்கும்; எப்படி பயன்படுத்துவது தெரியுமா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹார் தோல்வி எதிரொலி: அரசியலையும் குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு மகள் ரோகிணி அறிவிப்பு
    • கல்வியின் பொற்காலமும் புதிய சவால்களும் – வேலைன்னு வந்துட்டா… | அத்தியாயம் 3
    • தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை
    • கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.