Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் 11 ஆண்டுகள் – அஸ்வினி வைஷ்ணவ்
    தேசியம்

    அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் 11 ஆண்டுகள் – அஸ்வினி வைஷ்ணவ்

    adminBy adminJune 11, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் 11 ஆண்டுகள் – அஸ்வினி வைஷ்ணவ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்…

    ஒரு புதிய பாரதம் உருவாகிறது – இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார்.

    ஹரியானாவில் உள்ள ஜக்தேவ் சிங், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியைப் பயன்படுத்தி தனது விளைபயிர்கள் தொடர்பான முடிவுகளை மேற்கொண்டார். புகையில்லா சமையலறையையும், தனது குழந்தைகளுடன் பயனுள்ள வகையில் கூடுதல் நேரத்தை செலவிடுவதையும் உறுதிசெய்யும் வகையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றார்.

    இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், சிறு நகரங்கள், பெரு நகரங்களில் இவை அன்றாட எதார்த்தங்களாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் கட்டமைப்பு சீர்திருத்தங்களிலும், கடைசி குடிமகனுக்கும் அதிகாரமளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள தலைமைத்துவத்திலும் வேரூன்றியுள்ளது.

    தொடக்க காலத்தில் இருந்தே அந்த்யோதயா என்பது, மக்களை அடித்தளத்திலிருந்து பிரமிடுக்கு உயர்த்துகின்ற நமது வழிகாட்டும் தத்துவமாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு கொள்கையும், ஒவ்வொரு முதலீடும், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் இந்த தொலைநோக்குப் பார்வையால் வடிவம் பெற்றது.

    இந்த தொலைநோக்குப் பார்வை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தால் உருவாக்கப்பட்டது. உள்கட்டமைப்பு என்பது இணைப்புகளுக்காக, வளர்ச்சி என்பது அனைவரையும் உட்படுத்துவதற்காக, உற்பத்தி என்பது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, நடைமுறைகளை எளிதாக்குவது அதிகாரம் அளிப்பதற்காக என்ற நான்கு எளிமையான ஆனால் சக்திவாய்ந்த தூண்களை இது அடிப்படையாகக் கொண்டது.

    உள்கட்டமைப்பில் முதலீடு: கடந்த 11 ஆண்டுகளில் மூலதனச் செலவு கணிசமாக அதிகரித்து 2025-26-ல் ரூ.11.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் இந்தியாவின் கட்டுமானங்கள், டிஜிட்டல், சமூகம் ஆகியவற்றில் பொதுத்துறை முதலீடு கண்கூடாக தெரிகிறது. கட்டுமானங்களைப் பொறுத்தவரை சுமார் 59,000 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகளும், சுமார் 37,500 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அண்மையில் தொடங்கப்பட்ட செனாப், ஆஞ்சி ஆகிய பாலங்கள் நவீன இந்தியாவின் அடையாளங்களாகும். இந்தப் பாலங்கள் வழியாக வந்தே பாரத் ரயிலின் வருகையை காஷ்மீர் மக்கள் ஒரு கனவாக உணர்ந்தனர். இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று ஒரு பயணி கண்களில் கண்ணீர் ததும்ப கூறினார்.

    இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகளாவிய குறியீடாக மாறியுள்ளது. ஆதார், டிஜி லாக்கர், யூபிஐ போன்றவை அவற்றின் வளர்ச்சிக்காகவும், அனைவரையும் உள்ளடக்கி இருப்பதற்காகவும் உலக அளவில் இன்று ஆய்வு செய்யப்படுகிறது. 141 கோடி ஆதார் பதிவுகளும், தினந்தோறும் 60 கோடி யூபிஐ பரிவர்த்தனைகளும் அவற்றின் ஏற்பையும், பயன்பாட்டையும் பறைசாற்றுகின்றன.

    கடந்த 11 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் 387-லிருந்து 780 ஆக அதிகரித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7-லிருந்து 23 ஆக உயர்ந்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இரண்டு மடங்காகியுள்ளன. இந்தச் செயல்பாடு தரமான கல்வி, அனைவருக்கும் அணுகத்தக்க சுகாதார வசதி என்ற வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

    அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: நமது வளர்ச்சியின் சக்தி வாய்ந்த மதிப்பீடு மக்களை எவ்வளவு உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதில் காணப்படுகிறது. 53 கோடிக்கும் அதிகமான ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 4 கோடி வீடுகளும் 12 கோடி கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.

    சமையலறையில் தற்போது விறகுக்கு பதிலாக தூய்மையான சமையல் எரிவாயுவை 10 கோடி குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. 14 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. 35 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிஎம்- கிசான் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகள் நேரடியாக வருவாய் ஆதரவு பெற்றுள்ளனர்.

    பொருள் உற்பத்தி, புதிய கண்டுபிடிப்பு: 2015-ம் ஆண்டு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மேக்-இன்-இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மின்னணுப் பொருட்களின் உற்பத்தி 6 மடங்கு அதிகரித்து ரூ.12 லட்சம் கோடியை கடந்துள்ளது. மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்து ரூ.3 லட்சம் கோடியை எட்டி ஏற்றுமதி பொருட்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா தற்போது செல்பேசி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

    இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் தொடக்க நிலையிலிருந்து சாதனை அளவை நோக்கி முன்னேறி வருகிறது. நாட்டின் முதலாவது வணிக ரீதியான தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. ஐந்து வெளிப்பணி குறைகடத்தி மற்றும் சோதனை அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்திய மாணவர்கள் மற்றும் பொறியாளர்களால் உள்நாட்டு அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுடன் 20 சிப் செட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய செயல்பாடுகள் குறைக்கடத்தி உற்பத்தியில் திறனுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளன.

    சட்டங்களை எளிமைப்படுத்துதல்: ஆட்சி நிர்வாகத்தில் அமைதிப் புரட்சி நடந்துள்ளது. 1,500-க்கும் அதிகமான பழைய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 40,000-க்கும் அதிகமான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன. நம்பிக்கை மற்றும் எளிதாக்குதல் மீது கட்டமைக்கப்பட்டு குடிமக்களை சந்தேகிக்காமல் கவுரவத்துடன் நடத்துவதற்கு தொலைத் தொடர்பு சட்டம், டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இது முதலீட்டை, புதிய கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தி வளர்ச்சியில் நியாயமான சுழற்சியை உருவாக்குகிறது.

    மோடியின் கோட்பாடு: தீவிரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறை மாற்றம் பெற்றுள்ளது. துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதல் ஆகியவற்றிலிருந்து இப்போதைய ஆபரேஷன் சிந்தூர் வரை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தெளிவையும், துணிவையும் இந்தியா காட்டியுள்ளது.

    தீவிரவாத தாக்குதல்களுக்கு புதிய வழியிலான இந்த பதிலடி மோடியின் கோட்பாட்டில் ஒரு பகுதியாகும். இது மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. பாரதத்தின் மொழியில் தீர்க்கமான பதிலடி, அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்த சகிப்பின்மை, தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் இடையே பாகுபாடு காட்டாமை.

    இந்த முறை நமது பதிலடியின் முக்கியத்துவம் என்னவென்றால், உள்நாட்டு தொழில்நுட்பங்களையும், தளவாடங்களையும் பயன்படுத்தியதாகும். வளர்ச்சியடைய விரும்பும் ஒரு நாடு அதன் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமின்றி தற்சார்பு உடையதாகவும் இருக்க வேண்டும். அதனை இந்தியா மிகச்சரியாக செய்து வருகிறது.

    நம்பிக்கை: 2004-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாயின் பதவிக்காலம் நிறைவடைந்தபோது இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. 2004-2014 ஆகிய ஆண்டுகளுக்கிடையே அதே இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சீர்திருத்த கொள்கைகளால் வளர்ச்சி வேகத்தை எட்டியது. தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதில் நாம் உறுதியோடு இருக்கிறோம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘எல்லையில் அமைதி’ – சீனா வெளியுறவு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் அஜித் தோவல் மகிழ்ச்சி

    August 19, 2025
    தேசியம்

    பெங்களூருவில் தெரு நாய் கடித்து ரேபிஸ் பாதித்த சிறுமி உயிரிழப்பு – 4 மாதமாக உயிருக்கு போராடிய துயரம்

    August 19, 2025
    தேசியம்

    ஜெகதீப் தன்கர் எங்கே? – விடை தெரியாத கேள்விகளும், ‘மர்ம’ பின்னணியும்!

    August 19, 2025
    தேசியம்

    தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி

    August 19, 2025
    தேசியம்

    “சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல… கூட்டாளிகள்!” – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

    August 19, 2025
    தேசியம்

    திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 121 கிலோ தங்கம் வழங்க முன்வந்துள்ள பக்தர்!

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலகை உலுக்கிய 6 ராயல் ஊழல்கள்: ஹாரி & மேகனின் மெக்சிட் நாடகத்திலிருந்து மற்றும் நோர்வேயின் அதிர்ச்சியூட்டும் குற்ற வழக்கு வரை குற்றச்சாட்டுகள்
    • விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயிலில் இந்து முன்னணி அழைப்பு
    • 100 வயதான பெண் தினமும் 4 மைல் தூரம் நடப்பதற்காக நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வயதான தனது ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘எல்லையில் அமைதி’ – சீனா வெளியுறவு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் அஜித் தோவல் மகிழ்ச்சி
    • எஸ்.ஐ தேர்வில் புது நடைமுறை அமல்: பொதுப்பிரிவு, காவலர் ஒதுக்கீடு கிடையாது – அரசாணை வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.