Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்
    தேசியம்

    ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் – எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன ட்ரோன்கள். இவற்றை உள்நாட்டு ஆகாஷ் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின. இதனால் இந்திய ராணுவத்தில் தரையிலிருந்து வான் இலக்குகளை தகர்க்கும் படைப்பிரிவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.30,000 கோடி மதிப்பில் க்யூஆர்-எஸ்ஏஎம் என்ற அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை யூனிட்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை 25 கி.மீ முதல் 30. கி.மீ தூரத்தில் சுட்டு வீழ்த்தும். இந்த ஏவுகணைகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

    இந்த ஏவுகணைகளை டிஆர்டிஓ ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெறும். அப்போது க்யூஆர் – எஸ்ஏஎம் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

    எஸ்​-400, ஆகாஷ் ஏவுகணைகள்: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையிடம் ஏற்கெனவே எஸ்-400, ஆகாஷ், பராக்-8, இக்லா மற்றும் எல்-70 என்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளன. அவற்றுடன் க்யூஆர்- எஸ்ஏஎம் ஏவுகணை யூனிட்கள் இணையும்போது, நாட்டின் வான் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

    ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 6 கி.மீ தொலைவில் தாக்குதல் நடத்தும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை, 350 கி.மீ சென்று தாக்கும் தொலை தூர ஏவுகணையை குஷா திட்டத்தின் கீழ் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை 2028-29-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மதமாற்றத் தடை சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 16, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் தகவல்

    September 16, 2025
    தேசியம்

    இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொல்கத்தாவில் போராட்டம்

    September 16, 2025
    தேசியம்

    டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா

    September 16, 2025
    தேசியம்

    வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    September 16, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: விசாரணை அக்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
    • அதிசயம் இல்லை, வெறும் முறைகள்: உலகின் மிகச்சிறந்த 103 ஆண்டுகள் பழமையான புற்றுநோயை எளிய தினசரி பழக்கவழக்கங்களுடன் எவ்வாறு குணப்படுத்தியது
    • “அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி
    • உயர் இரத்த அழுத்தம்: அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது: இயற்கையாகவே அதை எவ்வாறு குறைப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.