Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்
    தேசியம்

    ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்

    adminBy adminJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் – எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன ட்ரோன்கள். இவற்றை உள்நாட்டு ஆகாஷ் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின. இதனால் இந்திய ராணுவத்தில் தரையிலிருந்து வான் இலக்குகளை தகர்க்கும் படைப்பிரிவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.30,000 கோடி மதிப்பில் க்யூஆர்-எஸ்ஏஎம் என்ற அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை யூனிட்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை 25 கி.மீ முதல் 30. கி.மீ தூரத்தில் சுட்டு வீழ்த்தும். இந்த ஏவுகணைகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

    இந்த ஏவுகணைகளை டிஆர்டிஓ ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெறும். அப்போது க்யூஆர் – எஸ்ஏஎம் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

    எஸ்​-400, ஆகாஷ் ஏவுகணைகள்: இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையிடம் ஏற்கெனவே எஸ்-400, ஆகாஷ், பராக்-8, இக்லா மற்றும் எல்-70 என்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளன. அவற்றுடன் க்யூஆர்- எஸ்ஏஎம் ஏவுகணை யூனிட்கள் இணையும்போது, நாட்டின் வான் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

    ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 6 கி.மீ தொலைவில் தாக்குதல் நடத்தும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை, 350 கி.மீ சென்று தாக்கும் தொலை தூர ஏவுகணையை குஷா திட்டத்தின் கீழ் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை 2028-29-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    July 27, 2025
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு விடுவிப்பு: ஏர் இந்தியா

    July 26, 2025
    தேசியம்

    “இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு

    July 26, 2025
    தேசியம்

    பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு

    July 26, 2025
    தேசியம்

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

    July 26, 2025
    தேசியம்

    கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பழனிசாமி சந்திப்பு!
    • நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
    • அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
    • அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரேமாதிரி மின்கட்டணமே நிர்ணயம்: தமிழக அரசு விளக்கம்
    • 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து: 2 விக்கெட்களை இழந்து இந்திய அணி போராட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.