Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘திருமாவளவன் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்’ – மத்திய அமைச்சர் எல்.முருகன்
    மாநிலம்

    ‘திருமாவளவன் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்’ – மத்திய அமைச்சர் எல்.முருகன்

    adminBy adminJune 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘திருமாவளவன் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்’ – மத்திய அமைச்சர் எல்.முருகன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா எனத் தெரியவில்லை. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகன் இன்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடு பற்றி கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் செய்தித்தாளை திறந்தாலே ஊழல் என்றுதான் செய்தி வரும். இப்போதைய பாஜக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாகும்.

    நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். மணிப்பூரில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா என தெரியவில்லை. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளது.

    2024 மக்களவைத் தேர்தலை அதிமுக இல்லாமல் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். தற்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளோம். இதனால் திமுகவினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். திமுக நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.

    புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதல்வர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.

    திராவிடர் கழகம் என்றாலே கலவரம் உருவாக்குவோர்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள். திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவத்தில் வேதனை அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். நாங்கள் மதவாத அரசியல் செய்யவில்லை. தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் வரும் பேரவைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை

    August 20, 2025
    மாநிலம்

    மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு

    August 20, 2025
    மாநிலம்

    குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்: ஆக.31-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்

    August 20, 2025
    மாநிலம்

    பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை 

    August 20, 2025
    மாநிலம்

    முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

    August 20, 2025
    மாநிலம்

    போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
    • படப்பிடிப்பில் விபரீதம்: குழந்தைகள் உள்பட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி
    • கூந்தலுக்கான மண்டு கி இம்லி: முடி வளர்ச்சிக்கு பாபாப் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது – இந்தியாவின் நேரங்கள்
    • தொடர் விடுமுறையை பயன்படுத்தி சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை
    • ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.