Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது
    தேசியம்

    தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது

    adminBy adminJune 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புவனேஸ்வர்: ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

    2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக், பட்டம் முடித்தவர். . இவர் காலஹந்தி மாவட்டத்தின் தரம்நகர் துணை ஆட்சியராக உள்ளார். உள்ளூர் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக துணை ஆட்சியர் திமான் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த தொழிலதிபர் இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் துணை ஆட்சியர் தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லதுக்கு அந்த தொழிலதிபரை வரவழைத்து முன் லஞ்சமாக ரூ.10 லட்சத்தை பெற்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் திமான் சிங்கை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையிலிருந்து ரூ.47 லட்சம் ரொக்கத்தை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    துணை ஆட்சியர் மீது ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம் 2020 பிரிவு 7-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசா விஜிலென்ஸ் துறை 2024-ம் ஆண்டில் 211 குற்ற வழக்குளை பதிவு செய்து 179 அரசு அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை கைது செய்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு

    August 20, 2025
    தேசியம்

    தொடர் விடுமுறையை பயன்படுத்தி சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை

    August 20, 2025
    தேசியம்

    மும்பையில் தொடரும் கனமழையால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு

    August 20, 2025
    தேசியம்

    மத்​திய அமைச்​சர் ஜெய்சங்கர் 3 நாள் ரஷ்யா​ பயணம்

    August 20, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 

    August 20, 2025
    தேசியம்

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
    • படப்பிடிப்பில் விபரீதம்: குழந்தைகள் உள்பட 120 பேர் மருத்துவமனையில் அனுமதி
    • கூந்தலுக்கான மண்டு கி இம்லி: முடி வளர்ச்சிக்கு பாபாப் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது – இந்தியாவின் நேரங்கள்
    • தொடர் விடுமுறையை பயன்படுத்தி சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை
    • ஆசிய கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான், ஓமன் நீக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.