Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“தேர்தல் வாக்குறுதிகள்… நான் விவாதத்துக்கு வரத் தயார்” – அமித் ஷாவுக்கு ஆ.ராசா பதில்
    மாநிலம்

    “தேர்தல் வாக்குறுதிகள்… நான் விவாதத்துக்கு வரத் தயார்” – அமித் ஷாவுக்கு ஆ.ராசா பதில்

    adminBy adminJune 9, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தேர்தல் வாக்குறுதிகள்… நான் விவாதத்துக்கு வரத் தயார்” – அமித் ஷாவுக்கு ஆ.ராசா பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வரத் தயார். ஆனால். இந்தியில் மட்டும் பேசக்கூடாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலளித்துள்ளார்.

    சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் பேசிய பேச்சு அப்பட்டமான பொய் , அருவருப்பான வஞ்சகம் , பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இந்த மூன்றையும் தவிர அவரின் பேச்சில் என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்துக்கு வரும் போது, அவருக்கு இருக்கும் தகுதி, பொறுப்பு, கடமை உணர்ச்சி ஆகியவற்றை கிஞ்சிற்றும் கவலைகொள்ளாமல், அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.

    மாற்றுக் கட்சி ஆட்சி அந்த மாநிலத்தில் நடந்தால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும், மதவாத பிளவை வேண்டுமென்றே உருவாக்கி, அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெறமுடியுமா என்ற அருவருப்பான உணர்ச்சிதான் அவருடைய பேச்சில் வெளிபட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு அழகல்ல.

    மாநில – மத்திய அரசுக்கு இடையே இருக்கும் சுமுக உறவுக்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சை அவர் பேசியுள்ளார். அவர் பேச்சை ஒவ்வொரு வரியாக ஆதாரத்தோடு எங்களால் பொய் என நிரூபிக்க முடியும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை பாஜக விரும்பாமல், அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமித் ஷாவின் பேச்சை போக்கை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு அமைதி, வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியை கொடுத்து வளர்ச்சி திட்டப்பணிகள் தடைபடாமல் விரைவாக வழங்கி நடைமுறைப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசும், பாஜகவும், அமித் ஷாவை வரவைத்து இப்படி ஒரு கேலிக்கூத்தான, அருவருப்பான அரசியல் நாகரிகத்துக்கு புறம்பான காரியத்தை அரங்கேற்றியுள்ளார்கள். அமித் ஷா என்ற தனிநபருக்கு மட்டும் அல்ல , அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது,” என்றார்.

    அப்போது பாஜக அரசு அதிகமாக நிதி ஒதுக்கிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நேரடி நிதி வருவாய் எவ்வளவு? தற்போது எவ்வளவு? நான்கு மடங்கு நேரடி நிதி வருவாய் உயர்ந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுக்கும் நிதி மிக குறைவாகவே உள்ளது,” என்றார்.

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை திமுகவுக்கு ஷாக் அடிகிறதா என்கிற கேள்விக்கு, “அமித் ஷாவை பார்த்து திமுகவுக்கு எதற்கு ஷாக் அடிக்க வேண்டும்? திமுகவை பார்த்து பாஜகவுக்கு ஷாக் அடித்த காரணத்தால்தான் உள்துறை அமைச்சரே வந்துள்ளார். பாஜகவின் எந்த மாதிரியான பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

    எல்லா தேர்தல்களிலும் மக்கள் திமுகவின் பின்னால் நிற்கிறார்கள். இதை புரிந்துகொள்ள முடியாமல், ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இவர்கள் பேசுவதை பார்த்து எங்களுக்கு எதற்கு பயம்? இவர்களைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 முறை நாட்டின் பிரதமர் தமிழ்நாடு வந்தார். அவரின் வருகையே சொல்லும் யாருக்கு பயம் என்பதை,” என்றார்.

    அப்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதி மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால் அதற்கும் ஒரு குழு அமைத்துள்ளார் முதல்வர். வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றை இந்த அரசு செய்துள்ளது. எங்கு விவாதத்தை வைத்தாலும் நான் வரத் தயார். ஆனால் இந்தியில் மட்டும் பேசக்கூடாது. மத்திய நிதி ஒதுக்க வேண்டிய எய்ம்ஸுக்காக இன்னமும் மாநில அரசு காத்துக்கொண்டுள்ளது.

    அமித் ஷா, மோடி ஆகியோரை பார்த்து எல்லாம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்களுக்கு பின்னால் ஒரு சித்தாந்தம் ஒளிந்துகொண்டு மற்ற இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் இங்கு அதனால் வெற்றி பெற முடியாததற்கு காரணம் எங்களிடம் அதற்கான மாற்று சித்தாந்தம் உள்ளது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் டெல்லியோ, ஹரியானாவோ, மகாராஷ்டிராவோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு,” என்றார்.

    தொகுதி மறுசீரமைப்பு பற்றி அமித் ஷா ஏன் பேச மறுக்கிறார் என்ற கேள்விக்கு, “எந்த அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வர போகிறது என திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பினாலும் எந்த பதிலும் பாஜகவிடம் இல்லை. 800-க்கும் அதிகமான இருக்கைகளை வைத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட என்ன அவசியம்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்தால் கொண்டு வந்தால் தென் இந்தியா முற்றிலும் பாதிக்கப்படும். தென் இந்திய மாநிலங்களின் துணை இல்லாமலே எந்த ஒரு மசோதாவையும் அவர்களால் நிறைவேற்ற முடியும் என்பதுதான் அதற்குள் இருக்கும் சூது. இதை முறியடித்த ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின்தான். அதை டெல்லி வரை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்றார்.

    மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாடு குறித்த கேள்விக்கு, “அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டை போல் அல்லாமல், இவர்கள் மதவாதத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பதை மதுரை மக்களே விரும்பவில்லை. தமிழைப் பற்றி இவ்வளவு பேசும் அமித் ஷா, கீழடி ஆய்வையும், இரும்பு பயன்பாட்டின் அறிக்கையையும் மத்திய அரசு திரும்ப திரும்ப ஏன் நிராகரிக்கிறது என தெரியவில்லை.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், திராவிடத்திற்கும் எதிரான மனநிலையை அவர்களே வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் நிச்சயம் பாஜக அறுவடை செய்யும். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்திய மொழிகளின் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். இந்தியைக் கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக சமஸ்கிருதம் மொழியை கொண்டு வருவார்கள்,” என்றார்.

    மோடி, அமித் ஷா வருகை திமுகவின் வெற்றியையே உறுதி செய்யுமா என்ற கேள்விக்கு, “எத்தனை முறை மோடி தமிழகம் வந்தாரோ அத்தனை வாக்கு வித்தியாசம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது. தற்போது எத்தனை முறை அமித் ஷா தமிழகம் வருகிறாரோ அத்தனை வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை. பில்கிஸ் பானு, மணிப்பூர் போன்றவற்றை பார்த்து மவுனமாக இருந்தார்கள்.

    ஒரே இந்தியா, ஒரே தேசம் என்று சொன்னால், ஒடிசாவில் போய், ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்டவர் எப்படி ஒரே இந்திய ஒரே தேசம் என கூறமுடியும். பாஜகவினர் கூறுவது அனைத்தும் பொய். ஆர்எஸ்எஸ்ஸின் இலக்குக்கு மோடியும் அமித் ஷாவும் பகடைக்காய்,” என்றார்.

    கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா பேசியது குறித்த கேள்விக்கு, “கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித் ஷா கூறியது குறித்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் அதை எதிர்கொள்ளும் திறன் எங்கள் முதலமைச்சருக்கு உண்டு,” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    August 17, 2025
    மாநிலம்

    பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    August 17, 2025
    மாநிலம்

    தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை – அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

    August 17, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாளை முதல் 38 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்: எல். முருகன் பேட்டி

    August 17, 2025
    மாநிலம்

    தீபாவளி டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் நிறைவு

    August 17, 2025
    மாநிலம்

    ”இல்லாதது பொல்லாததைச் சொல்லி பீதியை கிளப்புகிறார் ஆளுநர்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • சிறிய விவரங்களை நினைவுபடுத்த முடியவில்லையா? நினைவகத்தைப் பயிற்றுவிக்க 5 வழிகள் இங்கே
    • டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!
    • பாமக தலைவரானார் நிறுவனர் ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
    • உங்கள் 9-5 வேலைக்கு ஒரு மேசையுடன் பிணைக்கப்பட்டுள்ளதா? இருதயநோய் நிபுணர் அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் உங்கள் மேசை வேலையை ஆரோக்கியமாக மாற்றும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.