Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நானும் சமாதியில் தங்கி விடுகிறேன்: பெங்களூரு கூட்டநெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை வேதனை
    தேசியம்

    நானும் சமாதியில் தங்கி விடுகிறேன்: பெங்களூரு கூட்டநெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை வேதனை

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நானும் சமாதியில் தங்கி விடுகிறேன்: பெங்களூரு கூட்டநெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.

    அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லட்சுமணனும் (21) ஒருவர். இன்ஜினீயரிங் கல்லூரி இறுதி ஆண்டு மாணவரான அவர், குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்று உள்ளார். அவரது உயிரிழப்பு குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மாணவர் பூமிக் லட்சுமணனின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மகன் பூமிக்கை அடக்கம் செய்த இடத்தில் அவரது தந்தை பி.டி. லட்சுமணன் கண்ணீர் சிந்தி கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “மகனின் சமாதியில் நானும் தங்கி விடுகிறேன். என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்” என்று அவர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அவரை, உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக பி.டி.லட்சுமணன் கூறியதாவது:

    பெங்களூரு கூட்ட நெரிசலில் எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். எங்களை பொறுத்தவரை அவன் தங்க மகன். அவனுக்கு திரைப்படம் மீதோ, கிரிக்கெட் மீதோ மோகம் கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தியதால் அவர்களோடு சேர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்துக்கு சென்றுள்ளான். இளம் தலைமுறையினர் நண்பர்களின் பேச்சை கேட்டு நடக்கக்கூடாது. பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். உடன் சென்ற நண்பர்கள் அனைவரும் உயிர்தப்பி விட்டனர். எனது மகன் மட்டும் உயிரிழந்து உள்ளார்.

    ஆர்சிபி-யின் வெற்றி கொண்டாட்டத்துக்கு எனது மகனை பறிகொடுத்து விட்டேன். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். சமானிய பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெற்றி கொண்டாட்டத்துக்கு ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு தரப்பினர் பணம் சம்பாதிக்க, மக்களின் உயிர்களை பறிப்பது ஏன்?

    கர்நாடக அரசு தரப்பிலோ, ஆர்சிபி அணி தரப்பிலோ எனது குடும்பத்தினரை யாரும் சந்திக்கவில்லை. அவர்களது தவறுகளால் எனது ஒரே மகனை இழந்து தவிக்கிறேன். மகனின் எதிர்காலத்துக்காக நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அந்த இடத்திலேயே அவனை இப்போது அடக்கம் செய்திருக்கிறேன். என்னைப் போன்ற நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.

    எனது மகனை சிறுவயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் வளர்த்தேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவன், நண்பர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்தான். அதுவே அவனது உயிரை பறித்துவிட்டது. இளைய தலைமுறையினர் அவர்களின் பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டுகிறேன். இவ்வாறு பி.டி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    நிவாரண தொகை உயர்வு: பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த சூழலில் அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

    August 17, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பாஜக ஆலோசனை

    August 17, 2025
    தேசியம்

    பிஹாரில் ராகுல் காந்தியின் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ நாளை தொடக்கம்!

    August 16, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் பெருமை பேசிய பிரதமர் மோடி – சுதந்திர தின உரையும், சில ரியாக்‌ஷன்களும்!

    August 16, 2025
    தேசியம்

    ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் தான் இந்திய பிரிவினைக்கு காரணம்: என்சிஇஆர்டி

    August 16, 2025
    தேசியம்

    சீன வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை!

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
    • ஒரு விரிவுரை இல்லாமல் பெரிய உணர்வுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உங்கள் பிள்ளைக்கு கற்பிப்பதற்கான 5 வழிகள் – இந்தியாவின் நேரங்கள்
    • நெல்லையில் ஆக. 22-ல் பாஜக பூத் கமிட்டி மாநாடு: அமித் ஷா பங்கேற்பு
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை
    • மக்கள் ஏன் வித்தியாசத்தை வித்தியாசமாக உணர்கிறார்கள் என்பதை நரம்பியல் விஞ்ஞானி விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.