Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசே ஏற்பாடு: உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் முறையீடு
    தேசியம்

    ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசே ஏற்பாடு: உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் முறையீடு

    adminBy adminJune 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசே ஏற்பாடு: உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் முறையீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக அரசே ஏற்பாடு செய்தது. இதில் எங்களை பலிகடாவாக ஆக்க முயற்சிப்பது அநீதியானது என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    அரசு, போலீஸும் பொறுப்புL இந்நிலையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பட் நேற்று முன் தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது உண்மைக்கு புறம்பானது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா நடத்த வேண்டும் என கர்நாடக அரசுதான் முடிவெடுத்தது. அதற்கான ஏற்பாடுகளும் அரசு தரப்பில் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தற்கும், அதில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் எங்களை காரணமாக சுட்டுவது அநீதியானது.

    கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக குழு, சின்னசாமி மைதானத்தை வாடகைக்கு விடுவதை மட்டுமே கையாள்கிறது. அங்கு வரும் பார்வையாளர்கள், அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை அரசே கையாள்கிறது. அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருக்க வேண்டும். நுழைவுவாயில்களை கையாள்வது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை எங்களுடைய சங்கத்தின் பொறுப்பு அல்ல. அதற்கு முற்றிலும் போலீஸாரே பொறுப்பு ஆகும்.

    இந்த சூழலில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மூத்த நிர்வாகிகளை கைது செய்ய முயற்சிப்பது காவல்துறை மற்றும் அரசின் நீதிக்கு எதிரான செயலாகும். எங்களுக்கும் இந்த நெரிசல் மரணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால் எங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எங்கள் நிர்வாகிகளை இவ்வழக்கில் கைது செய்வதையும் தடுக்க வேண்டும்”என கோரியுள்ளார். இந்த மனு ஓரிரு தினங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நெரிசல் மரணங்கள் தொடர்பாக‌ தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. அப்போது இந்த நெரிசல் மரணங்கள் தொடர்பாக பதில் அளிக்குமாறு கர்நாடக அரசு, ஆர்சிபி அணி நிர்வாகம், கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் சங்கமும், ஆர்சிபி அணி நிர்வாகியும் இந்த நெரிசல் மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்

    August 13, 2025
    தேசியம்

    “எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது” – பாகிஸ்தான் பிரதமருக்கு ஒவைசி பதிலடி

    August 13, 2025
    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்

    August 13, 2025
    தேசியம்

    “ரேவந்த் மூலம் சந்திரபாபு நாயுடுவுடன் ‘தொடர்பில்’ இருக்கிறார் ராகுல்” – ஜெகன் மோகன் ரெட்டி பகீர்

    August 13, 2025
    தேசியம்

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் வங்கியில் பட்டப்பகலில் 15 கோடி தங்கம், பணம் கொள்ளை

    August 13, 2025
    தேசியம்

    ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தகர்ப்போம்: பாக். ராணுவ தளபதி அசிம் எச்சரிக்கை

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “உங்களை நேசிக்கிறோம்…” – ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
    • மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்
    • பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா-தாடை-கைவிடுதல் வடக்கு விளக்குகள் புகைப்படங்கள் உண்மையானவை என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்
    • டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்
    • ‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.