Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தங்க நகை கடன் தொடர்பான எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது ரிசர்வ் வங்கி: சு.வெங்கடேசன் எம்.பி பெருமிதம்
    மாநிலம்

    தங்க நகை கடன் தொடர்பான எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது ரிசர்வ் வங்கி: சு.வெங்கடேசன் எம்.பி பெருமிதம்

    adminBy adminJune 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தங்க நகை கடன் தொடர்பான எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது ரிசர்வ் வங்கி: சு.வெங்கடேசன் எம்.பி பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.

    தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.

    2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.

    3. 2024 செப்டம்பர் 30-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும்.

    4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.

    5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப் படியே கடன் வாங்குபவர்கள் “இந்த நகை என்னுடையது தான்” என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.

    6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும்.

    7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.

    8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.

    9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.

    10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்” இவ்வாறு சு.வெங்கடேசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு

    July 25, 2025
    மாநிலம்

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்

    July 25, 2025
    மாநிலம்

    தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை – வழக்கின் முழு விவரம்

    July 25, 2025
    மாநிலம்

    மருத்துவமனையில் இருந்தபடியே காணொலியில் மக்களுடன் உரையாடினார் முதல்வர்

    July 25, 2025
    மாநிலம்

    எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிட கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    July 25, 2025
    மாநிலம்

    அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாரத்திற்கு மூன்று முறை தலையை மசாஜ் செய்வது ஆரோக்கியத்தில் இந்த ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவ்வாறு செய்வதற்கான சரியான வழி – இந்தியாவின் டைம்ஸ்
    • சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
    • பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
    • அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு: பொதுவான வயிற்று பாக்டீரியாக்கள் 12 மில்லியன் புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.