Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கயத்தாறு அருகே உபமின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து: பல மணி நேரம் போராடி தீயணைப்பு
    மாநிலம்

    கயத்தாறு அருகே உபமின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து: பல மணி நேரம் போராடி தீயணைப்பு

    adminBy adminJune 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கயத்தாறு அருகே உபமின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து: பல மணி நேரம் போராடி தீயணைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவில்பட்டி: கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராமம் உபமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ 7 இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்டிகள் மூலமும், மண் கொண்டும் பல மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் அய்யனார்ஊத்தில் தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான உபமின் நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 400/230 110 கி.வோ. செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இந்த உபமின் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென கசிவு ஏற்பட்டது. ஒரு மின்மாற்றி 70 ஆயிரம் லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்டது. இதனால், மின்மாற்றியில் ஏறபட்ட தீ மளமளவெனப் பரவியது. இதனால் அங்கு செயல்படும் மற்ற மற்ற மின்மாற்றிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கரும்புகை அதிகளவு வெளியேறி புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்து கோவில்பட்டி, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மின்மாற்றியில் ஆயில் உள்ளதால், அதன் வெப்பம் அதிகரித்து வெடித்து விடாத வண்ணம் நுரை தீயணைப்பான் (Foam) கொண்டு அதனை குளிரூட்டி தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ கொஞ்சம் கட்டுக்குள் வந்ததும், ஜேசிபி இயந்திரம் மூலம் மண் கொட்டி தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

    தகவல் அறிந்து வட்டாட்சியர் சுந்தர ராகவன், காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், “பணிக்கர்குளம் உப மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் nitrogen suppression system பொருத்தி உள்ளனர். இது வேலை செய்யவில்லை. காலை 6 மணிக்கு தீயணைக்கும் பணி தொடங்கியது. மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இங்கு மொத்தம் 4 மின்மாற்றி அலகுகள் உள்ளன. ஒரு மின்மாற்றியில் தீப்பிடித்தது எரிந்தது. அது மற்றவைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு கிடையாது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு

    July 25, 2025
    மாநிலம்

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்

    July 25, 2025
    மாநிலம்

    தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை – வழக்கின் முழு விவரம்

    July 25, 2025
    மாநிலம்

    மருத்துவமனையில் இருந்தபடியே காணொலியில் மக்களுடன் உரையாடினார் முதல்வர்

    July 25, 2025
    மாநிலம்

    எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிட கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    July 25, 2025
    மாநிலம்

    அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாரத்திற்கு மூன்று முறை தலையை மசாஜ் செய்வது ஆரோக்கியத்தில் இந்த ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவ்வாறு செய்வதற்கான சரியான வழி – இந்தியாவின் டைம்ஸ்
    • சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
    • பிரதமர் மோடி நாளை இரவு வருகை: தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
    • அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு: பொதுவான வயிற்று பாக்டீரியாக்கள் 12 மில்லியன் புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கப்படலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.