Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘கட்சி பேரைச் சொல்லி ஜெயிக்கிறது இனி கஷ்டமாகிடும்!’ – வெடிக்கும் வேலூர் மாநகராட்சி திமுக மண்டலத் தலைவர்கள்
    மாநிலம்

    ‘கட்சி பேரைச் சொல்லி ஜெயிக்கிறது இனி கஷ்டமாகிடும்!’ – வெடிக்கும் வேலூர் மாநகராட்சி திமுக மண்டலத் தலைவர்கள்

    adminBy adminJune 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கட்சி பேரைச் சொல்லி ஜெயிக்கிறது இனி கஷ்டமாகிடும்!’ – வெடிக்கும் வேலூர் மாநகராட்சி திமுக மண்டலத் தலைவர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    “வெளியில தலைக்காட்ட முடியல… ஓட்டுப் போட்ட மக்களுக்கும் பதில் சொல்ல முடியல. அடுத்த தேர்தலுக்கு வார்டுக்குள்ள ஓட்டுக் கேட்டுப் போறதே சிரமமாகிடும் போலிருக்கு” – இப்படிப் புலம்புகிறவர்கள் வேறு யாருமல்ல… வேலூர் மாநகராட்சியில் இருக்கும் திமுக-வின் நான்கு மண்டலக்குழு தலைவர்களும் தான். இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் திமுக-வைச் சேர்ந்த மேயர் சுஜாதா!

    ​தி​முக வசமிருக்​கும் வேலூர் மாநக​ராட்​சி​யில் மேயர், துணை மேயர் 4 மண்​டலங்​களின் தலை​வர்​கள் என அனைத்​தை​யும் திமுக-வே கைப்​பற்றி வைத்​திருக்​கிறது. இருந்த போதும், அதி​காரத்​துக்கு வந்து மூன்று ஆண்​டு​களாகி​யும் மாநக​ராட்​சி​யில் பேர் சொல்​லும்​படி​யாக எந்​தக் காரிய​மும் நடக்​க​வில்லை என ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே புலம்​பு​கி​றார்​கள். மக்​களின் குறை​களை எடுத்​துச் சொல்லி திட்​டங்​களை செயல்​படுத்​தலாம் என்​றால் மாமன்​றக் கூட்​டத்​தையே 3 அல்​லது 4 மாதங்​களுக்கு ஒரு​முறை​தான் கூட்​டு​கி​றா​ராம் மேயர் சுஜா​தா.

    இதையெல்​லாம் ஆகப் பெரும் குற்​றச்​சாட்​டாக அடுக்​கும் மண்​டலத் தலை​வர்​கள், “மேயர் சுஜாதா தனது அதி​காரத்தை பகிர்ந்​தளிக்க விரும்​பாத​தால் மாநக​ராட்சி நிர்​வாகமே செயலிழந்து கிடக்​கிறது” என்று ஆதங்​கப்​படு​கி​றார்​கள். இது குறித்து நம்​மிடம் பேசிய 1-வது மண்​டலக்​குழு தலை​வர் புஷ்பல​தா, “வேலூர் மாநக​ராட்​சி​யில் மொத்​தம் 60 வார்​டு​கள். இதில், 15 வார்​டுக்கு ஒரு மண்​டலம் என மொத்​தம் 4 மண்​டலங்​கள் உள்​ளன. இந்த 4 மண்​டலங்​களி​லும் மண்​டலக்​குழுத் தலை​வர்​களாக திமுக-வைச் சேர்ந்​தவர்​களே இருக்​கி​றோம்.

    பொது​வாக மாதம் ஒரு முறை மண்​டலக்​குழுக் கூட்​டம் நடத்த வேண்​டும். இதில், அந்​தந்த மண்​டலத்​துக்கு உட்​பட்ட 15 வார்​டு​களின் கவுன்​சிலர்​கள் கலந்து கொண்டு தங்​களது வார்​டுக்கு தேவை​யான வசதி​கள் குறித்​தும், அடிப்​படை தேவை​கள் குறித்​தும், வளர்ச்​சிப் பணி​கள் குறித்​தும் கோரிக்​கை​களை முன்​வைப்​பார்​கள். அதை பரிசீலித்து ஒரு வார்​டுக்கு தலா ரூ.5 லட்​சத்​துக்​கான பணி​களை செய்து முடிக்க மண்​டலக்​குழுக் கூட்​டத்​திலேயே தீர்​மானம் நிறை​வேற்றி அதை செயல்​படுத்​தும் அதி​காரம் மண்​டலக்​குழு தலை​வ​ருக்கு உண்​டு.

    அதன்​படி, கடந்த 2022-ல் ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும் 2 கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன. ஆனால், அதில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் எதை​யுமே செயல்​படுத்த மாநக​ராட்சி நிர்​வாகம் முன்​வர​வில்​லை. மண்​டலக்​குழுக் கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானங்​களை மாமன்​றக் கூட்​டத்​தில் வைத்து அங்​கும் அது நிறை​வேறி​னால் தான் நிதி ஒதுக்​கீடு செய்து பணி​கள் செய்ய அனு​மதி வழங்​கப்​படும் என மேயர் தரப்​பில் சொல்​கி​றார்​கள். அதேசம​யம், ஏற்​கெனவே செய்​து​முடிக்​கப்​பட்ட பணி​களுக்கு பணத்​தைப் பட்​டு​வாடா செய்​யாத​தால் அடுத்​தடுத்த பணி​களை எடுத்​துச் செய்ய யாரும் முன்வர மறுக்​கி​றார்​கள். இதனால், அடுத்​தடுத்த மண்​டலக் கூட்​டங்​களை எங்​களால் நடத்த முடிய​வில்​லை.

    மாதம் ஒரு முறை மாமன்​றக் கூட்​டத்தை கூட்​டி​னால் அங்கு எங்​களின் குறை​களை தெரிவிக்​கலாம். ஆனால், அதற்​கும் சிக்​கலை ஏற்​படுத்​தும் வித​மாக 3 அல்​லது 4 மாதங்​களுக்கு ஒரு முறை தான் மாமன்ற கூட்​டத்​தையே கூட்​டு​கின்​ற​னர். மேயரைப் பார்ப்​பதே குதிரைக் கொம்​பாக உள்​ளது. அப்​படியே பார்த்​தா​லும் எங்​கள் வார்​டு​களின் பிரச்​சினையை எடுத்​துச் சொன்​னால், ‘ஆணை​யரைப் பார்த்​துப் பேசுங்​கள்’ என்று சொல்லி எங்​களை அலைக்​கழிக்​கி​றார் மேயர்.

    இதனால், ஓட்​டுப்​போட்ட சனங்​களுக்கு பதில் சொல்ல முடி​யாமல் கவுன்​சிலர்​கள் எங்​களிடம் வந்து குறை​களைச் சொல்​கி​றார்​கள். பிரச்​சினையே ஒட்​டுமொத்த அதி​காரத்​தை​யும் தானே வைத்​திருக்க வேண்​டும் என மேயர் சுஜாதா நினைப்​பது தான். அந்​தளவுக்கு சுய​மாக சிந்​திக்க விடா​மல் வெளி​யில் இருந்து சிலர் அவரை இயக்​கு​கி​றார்​கள். அவர்​கள் சொல்​வதைக் கேட்​டுக் கொண்டு மண்​டலத் தலை​வர்​களுக்கு அதி​காரத்தை பகிர்ந்​தளிக்க தயங்​கு​கி​றார் மேயர். இதனால், எங்​களை மண்​டலக் குழு கூட்​டத்​தை​யும் நடத்​த​வி​டா​மல் தடுக்​கி​றார்.

    இப்​படி மேயரின் நிர்​வாக திறமை​யின்​மை​யால் ஆட்​சிக்கு தான் அவப்​பெயர் உண்​டாகிறது. இதேநிலை நீடித்​தால் அடுத்த தேர்​தலில் கட்சி பெயரைச் சொல்லி திமுக-​வினர் வெற்றி பெறு​வது கஷ்ட​மான ஒன்​றாகி​விடும். அந்​தளவுக்​கு, தனிப்​பட்ட செல்​வாக்கு உள்​ளவர்​கள் மட்​டும் தான் தேர்​தலில் ஜெயிக்க முடி​யும் என்ற நிலையை மேயர் தரப்பு உரு​வாக்​கி​விட்​டது” எனக் கொட்​டித் தீர்த்​தார்.

    மேயர் சுஜா​தா​விடம் இதற்​கான விளக்​கத்தை நாம் கேட்ட போது, “இங்கு யாருடைய அதி​கார​மும் பறிக்​கப்​பட​வில்​லை. மண்​டலக்​குழுக் கூட்​டத்தை அதன் தலை​வர்​கள் தான் கூட்ட வேண்​டும். மண்​டலக்​குழுக் கூட்​டத்தை கூட்​டச்​சொல்லி நான் பலமுறை அறி​வுறுத்​தி​யும் மண்​டலக்​குழுத் தலை​வர்​கள் அதை செய்​யாமல் உள்​ளனர். அதற்கு நான் என்ன செய்ய முடி​யும்? மண்​டலக்​குழுத் தலை​வர்​களுக்கு முழு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அந்த அதி​காரத்தை வழங்க வேண்​டிய ஆணை​யருக்​கும் இது தெரி​யும்” என்​றார்.

    கட்​சிக்கு களங்​கம் உண்​டாக்​கும் விதத்​தில் செயல்​படு​கிறவர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்​டம் கட்​டும் பொறுப்​பில் இருப்​பவர் திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன். அவரது சொந்த மாவட்​ட​மான வேலூரில் நடக்​கும் இந்​தச் சமாச்​சா​ரங்​கள் எல்​லாம் அவருக்கு தெரி​யா​தா… அல்​லது தெரிந்​தும் தெரி​யாமல் இருக்​கிறா​ரா?



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தெரு நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

    August 10, 2025
    மாநிலம்

    ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி

    August 10, 2025
    மாநிலம்

    “மொழி அரசியல் இல்லாமல் தமிழக அரசியல் இருக்காது!” – தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் கணையாழி ம.இராசேந்திரன் நேர்காணல்

    August 10, 2025
    மாநிலம்

    அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்

    August 10, 2025
    மாநிலம்

    தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநராக ஏ.சோமசுந்தரம் நியமனம்

    August 10, 2025
    மாநிலம்

    தேர்தலில் திமுகவை வீழ்த்த உறுதியேற்பு: பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என பொதுக்குழு தீர்மானம்

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெரு நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
    • ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி
    • உ.பி.யில் காவல் நிலையத்தை காக்கும் லங்கூர் குரங்கு: ஆய்வாளர் மேசையில் அமர்ந்து பழங்களை உண்ணும் காட்சி வைரல்
    • “மொழி அரசியல் இல்லாமல் தமிழக அரசியல் இருக்காது!” – தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் கணையாழி ம.இராசேந்திரன் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.