Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை” – நயினார் நாகேந்திரன்
    மாநிலம்

    “பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை” – நயினார் நாகேந்திரன்

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை” – நயினார் நாகேந்திரன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை. அவரது முயற்சிக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

    மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் ஜூன் 8-ல் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் மறுநாள் காலை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். மாலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    எம்ஜிஆர் மதுரையில்தான் முதல் கூட்டம் நடத்தினார். மதுரையில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் வெற்றி பெறும். இது மீனாட்சி ஆட்சி செய்யும் இடம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதனால்தான் மதுரையில் கூட்டம் நடத்தப்படுகிறது. பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார். பாமகவும் வரும். தேமுதிக வருகையை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.

    பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை. அவரது முயற்சிக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார். அவர் மக்கள் நலனை விரும்புபவர்.

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த சோதனையில் பங்கேற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டது, வழக்கமான நடைமுறைதான்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? – காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

    August 5, 2025
    மாநிலம்

    கலங்கரை விளக்கம் – திருமயிலை மெட்ரோ 2 சுரங்க இயந்திரங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்

    August 5, 2025
    மாநிலம்

    அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    August 5, 2025
    மாநிலம்

    கருணாநிதி​ நினைவு நாள்: ஆக.7-ம் தேதி திமுக அமைதிப் பேரணி

    August 5, 2025
    மாநிலம்

    தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம்

    August 5, 2025
    மாநிலம்

    மதுரை திமுக – மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் மல்லுக்கட்டு!- கூட்டணிக்கு உள்ளேயே நடக்கும் தொடர் குத்துவெட்டு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.100 கோடி வசூலை கடந்த ‘மகாவதார் நரசிம்மா’
    • சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? – காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
    • ஜீரா வாட்டர் Vs ச un ன்ஃப் நீர்: எந்த காலை பானம் ஆரோக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரட்டை வாக்காளர் அட்டை விவகாரம்: தேஜஸ்வி யாதவ் மீது போலீஸில் புகார்
    • ’கிங்டம்’ ஓடிடி வெளியீட்டில் மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.