Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை
    மாநிலம்

    மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. இந்த தற்காலிக அறுபடை வீடுகளில் ஜூன் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், ஜூன் 22-ல் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்ட தனிநபரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அம்மா திடலில் பல்வேறு கட்சியினர் மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முருக பக்தர்கள் மாநாடு, அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து ஜூன் 4-ல் மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டுக்கு 10 நாள் முன்பிருந்து மாநாடு நடைபெறும் வளாகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்புக்குள் அமைத்து வழிபாடு நடத்தினால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு பரிசீலனையில் உள்ளது.

    மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பாக சில கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளோம். அதற்கு மாநாட்டு ஏற்பாட்டாளர்களிடம் சில வினாக்களை கேட்டு உள்ளோம். அதற்கு இப்போது வரை பதில் வரவில்லை. அந்த மனு மீது 9-ம் தேதி தான் முடிவெடுக்கப்படும். தற்போது அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டது.

    மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி வாதிடுகையில், “மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து காலை, மாலையில் 2 மணி நேரம் வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க உள்ளோம். அதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் தயாராக உள்ளது. மாநாட்டு வளாகத்துக்கு வந்த போலீஸார் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கக் கூடாது என பணியாளர்களை மிரட்டியுள்ளனர்,” என்றார்.

    இதையடுத்து நீதிபதி, “முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல மாநாடுகள் நடைபெற்று உள்ளது. தற்போது அனுமதி மறுப்பது ஏன்? அங்கு அறுபடை வீடுகளின் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்த உள்ளனர். அதற்கு அனுமதி மறுக்க போலீஸார் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. போலீஸார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்படக் கூடாது. மனு குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? – காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

    August 5, 2025
    மாநிலம்

    கலங்கரை விளக்கம் – திருமயிலை மெட்ரோ 2 சுரங்க இயந்திரங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்

    August 5, 2025
    மாநிலம்

    அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    August 5, 2025
    மாநிலம்

    கருணாநிதி​ நினைவு நாள்: ஆக.7-ம் தேதி திமுக அமைதிப் பேரணி

    August 5, 2025
    மாநிலம்

    தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம்

    August 5, 2025
    மாநிலம்

    மதுரை திமுக – மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் மல்லுக்கட்டு!- கூட்டணிக்கு உள்ளேயே நடக்கும் தொடர் குத்துவெட்டு

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.100 கோடி வசூலை கடந்த ‘மகாவதார் நரசிம்மா’
    • சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? – காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
    • ஜீரா வாட்டர் Vs ச un ன்ஃப் நீர்: எந்த காலை பானம் ஆரோக்கியமானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரட்டை வாக்காளர் அட்டை விவகாரம்: தேஜஸ்வி யாதவ் மீது போலீஸில் புகார்
    • ’கிங்டம்’ ஓடிடி வெளியீட்டில் மாற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.