Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அதிமுக’ – இபிஎஸ் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
    மாநிலம்

    ‘தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அதிமுக’ – இபிஎஸ் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்

    adminBy adminJune 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அதிமுக’ – இபிஎஸ் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது,” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்?

    டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, “பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்” என ஏன் பொய் சொன்னார்? கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் மத்திய அமைச்சர் அமித்ஷா வீடு. பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார்.

    பாஜகவைப் பார்த்து கோரிக்கை வைக்கவே முடியாதவர் பழனிசாமி. இவர் ‘தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பதுதான் பாசிச பாஜகவின் சதித் திட்டம். இந்தச் சதியை நாட்டிலேயே முதன்முதலாக அம்பலப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் தமிழக முதல்வர்தான்.

    தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்னையில் அழைத்து கூட்டம் போட்டது திராவிட மாடல் அரசு. அந்த பிரச்சினைக்காக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

    இப்படி எதாவது ஒரு வகையில் தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அதிமுக பதிவு செய்திருக்கிறதா? அதனைக் கேள்வி கேட்டால், ‘அமித்ஷாவிடம் பேசினேன். மத்திய அரசிடம் குரல் கொடுத்தேன்’ என கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி. பாஜகவின் பாசிசத் திட்டத்தை முதல்வர் அம்பலப்படுத்தியவுடன் அவர்களைக் காப்பாற்றப் புரளி நாடகத்தைக் காட்ட வந்துவிட்டார் பழனிசாமி. இந்தித் திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு அதை எதிர்ப்பேன் என்கிறாரே பழனிசாமி இதுதானே உலக மகா உருட்டு.

    மாநிலங்களை ஒழித்துக்கட்டி நாட்டின் கூட்டாட்சி ஏற்பாட்டைச் சிதைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் சதித்திட்டம் அதற்கு ஒரு வழியாகத்தான் தொகுதி மறுசீரமைப்பை பாஜக பயன்படுத்த இருக்கிறது என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும், பழனிசாமிக்குத்தான் தெரியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்படும் பழனிசாமி தனது டெல்லிப் பண்ணையார்களின் மனதைக் குளிர்விப்பதற்காக உதிர்க்கும் உளறல்களால் தான் ஒரு சிறந்த அடிமை என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து விட்டு, வெளியே வந்து மத்திய பாஜக அரசைத் தாஜா செய்வதற்காக ஜெயக்குமார் பேட்டி கொடுத்த டபுள் ரோல் கட்சிதானே அதிமுக. அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளே ஒன்று பேசுவதும், வெளியே பாஜகவின் மனம் நோகாமல் பேசுவதும் என இரட்டை வேடம் போட்டவர்தானே பழனிசாமி.

    உறுதியாக, அறுதியாக, தாய் மீது ஆணையாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றெல்லாம் சிலகாலம் வரை சொல்லி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து கடைசியில் கழுத்தறுத்துவிட்டு அமித்ஷா காலில் விழுந்த பழனிசாமி பேசுகிறார். ‘தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று.

    பாஜக கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்டவர். தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொல்கிறார். பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது’ என்று அவர் விமர்சித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கலங்கரை விளக்கம் – திருமயிலை மெட்ரோ 2 சுரங்க இயந்திரங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்

    August 5, 2025
    மாநிலம்

    அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    August 5, 2025
    மாநிலம்

    கருணாநிதி​ நினைவு நாள்: ஆக.7-ம் தேதி திமுக அமைதிப் பேரணி

    August 5, 2025
    மாநிலம்

    தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம்

    August 5, 2025
    மாநிலம்

    மதுரை திமுக – மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் மல்லுக்கட்டு!- கூட்டணிக்கு உள்ளேயே நடக்கும் தொடர் குத்துவெட்டு

    August 5, 2025
    மாநிலம்

    பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? – அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கிங்டம்’ ஓடிடி வெளியீட்டில் மாற்றம்
    • கலங்கரை விளக்கம் – திருமயிலை மெட்ரோ 2 சுரங்க இயந்திரங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்
    • புதிய இந்தியா: சபியாசாச்சி தனது மிக சக்திவாய்ந்த திருமண சேகரிப்பை இன்னும் கைவிட்டார், அது நீங்கள் எதிர்பார்ப்பது அல்ல | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ப.சிதம்பரம் கருத்து தவறானது: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
    • கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.