Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு’ – பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் காங். அரசை சாடும் பாஜக
    தேசியம்

    ‘அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு’ – பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் காங். அரசை சாடும் பாஜக

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு’ – பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் காங். அரசை சாடும் பாஜக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாசத் பூனவல்லா சாடியுள்ளார்.

    செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பூனவல்லா, “பெங்களூருவில் நாம் பார்த்தது, அரசால், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவே. அதற்கு முதல்வரும், துணை முதல்வருமே நேரடி பொறுப்பு. அவர்களே முதன்மை குற்றவாளிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு பதிலாக மற்றவர்கள் மீது பழி போடுவதையே நாம் பார்க்கிறோம். 24 மணி நேரத்துக்கு முன்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காவல்துறை அற்புதமாக வேலை செய்தது, அவர்கள் சிறப்பாக வேலை செய்திருந்தனர் என்று கூறி, அவர் கூட்டத்தின் மீது பழியைச் சுமத்துகிறார்.

    முதல்வரும் ஏதோ ஒன்றைச் செய்ய முயல்வதை நாம் பார்க்கிறோம். 24 மணி நேரத்துக்குள் யாரோ ஒருவர் மீது பழியை சுமத்த தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் தலைமைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆர்சிபி என்பது தேசிய அணியா என்ன? அவர்கள் தேசிய போட்டியிலா வென்றிருக்கிறார்கள்?

    பின்பு ஏன் 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விதான சவுதாவில் விழா நடத்த அனுமதி அளித்ததா? யார் அனுமதி கொடுத்தது. விமான நிலையத்தில் இருந்து அவர்களை வரவேற்று, கோப்பையை முத்தமிட்டு, கொடியை அசைத்து புகைப்படங்கள் எடுத்து பாராட்டு தெரிவிக்க முயன்றவர் யார்? உயிரிழப்பு நிகழ்ந்த பின்பும், நிகழ்ச்சியைத் தொடரும் முடிவினை எடுத்தது யார்?

    ஆக இது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், வேறொருவரை பலியாக்குவதற்குமான மற்றுமொரு முயற்சி. இப்போது ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அவர் ஏன் மற்றவர்கள் மீது சுமத்தும் பொறுப்புக்கூறலை, பெங்களூரு சம்பவத்தின் முதன்மை குற்றவாளிகளான சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் மீதும் சுமத்தக்கூடாது? அவர்கள் இருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பழியை அடுத்தவர் மீது சுமத்துகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்​சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்காக ஜுன் 4ம் தேதி புதன்கிழமை அன்று விதான சவுதா வளாகத்​தி​லும், சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தி​லும் வெற்றி விழா நடை​பெற்​றது. சின்ன​சாமி மைதானத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயி​ரிழந்​தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆந்திரா முழுவதும் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – ‘ஸ்ரீ சக்தி’ திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடக்கம்

    August 5, 2025
    தேசியம்

    ராகுல் தலைமையில் 7-ம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம்

    August 5, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

    August 5, 2025
    தேசியம்

    பஹல்காமில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் தீவிரவாதிகள்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன: பாதுகாப்புப் படை அதிகாரிகள்

    August 5, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

    August 5, 2025
    தேசியம்

    ராகுல் காந்தி எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; வழக்கின் முழு விவரம்

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலகப் பழமையான பெண்கள்: 114 வயதான ஷிகேகோ ககாவா ஜப்பானின் மிகப் பழமையான நபராகிறார்; ஒரு எளிய நீண்ட ஆயுள் உதவிக்குறிப்பைப் பகிர்ந்து கொள்கிறது, ‘என்னிடம் இல்லை ….’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திரா முழுவதும் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – ‘ஸ்ரீ சக்தி’ திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடக்கம்
    • ராஞ்ஜனா ‘ஏஐ’ கிளைமாக்ஸ்: ஆன்மாவைச் சிதைத்துவிட்டது – தனுஷ் கண்டனம்
    • ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்
    • தெய்வீக ஆற்றலுடன் எதிரொலிக்கும் 5 அறியப்படாத சக்தி பீத்தாஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.