Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்ததினம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை
    மாநிலம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்ததினம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்ததினம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம், அறிவாலயம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 102-வது பிறந்த தினம் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அதன்பின், சிஐடி நகரில் உள்ள இல்லத்தில், கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர், அங்குள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், முரசொலி அலுவலகம் சென்ற முதல்வர், அங்குள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், காலை 9.30 மணிக்கு, அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, காங்கிரஸ் கட்சி சார்பில் கு.செல்வப்பெருந்தகை, கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுதவிர திமுக சார்பில், கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

    கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் சார்பில், அன்னதானம், பரிசுப்பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    “பெரியார், காமராஜர் பற்றி விஜய்க்கு 10 நிமிடம் பேசத் தெரியுமா?” – சீமான்

    September 13, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

    September 13, 2025
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    September 13, 2025
    மாநிலம்

    ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

    September 13, 2025
    மாநிலம்

    கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சால்ட், பட்லர் அதிரடி ஆட்டம்: டி20 கிரிக்கெட்டில் 304 ரன்கள் குவித்த இங்கிலாந்து
    • பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு
    • மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
    • பன்னீர் பக்க விளைவுகள்: இரத்த சர்க்கரையில் உயர்வு, எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அபாயங்கள் மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.